Thursday, October 25, 2007

நிர்வாண இராணுவம்..

ஆண்குறிகளோடு அலையிற ராணுவம் எங்களுக்கு புதிசில்லை. சண்டை கோரமா நடக்கிற இந்த 25 வருசத்தில துப்பாக்கிகளை பிடிக்க மறக்கிற சந்தர்ப்பத்திலையும் தங்கடை ஆண்குறிகளை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு என்ர தோழிகளையும் அக்காக்களையும் தங்கைகளையும் அம்மாக்களையும் தேடி அலையும் கேவல ராணுவத்தை வீதியெங்கும் பாக்கிறன்.

நேற்று மன்னார் வங்காலையில நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இண்டைக்கு இந்தப் பதிவை நான் இட்டுக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில எங்கோ தமிழர் தாயகத்தின் ஏதோ ஒரு மூலையில் வெளித்தெரியாமல் வேட்டையாடப்படும் என் சக மனிதனின் என் சகோதரியின் கதறல் ஒலி என் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கோணேஸ்வரி, கிருசாந்தி, சாராதாம்பாள், தர்சினி, என்று நீளும் பட்டியல் மட்டுமே நமக்கு தெரியும். வேட்டையாடப்பட்டு தன் ஆண்குறி அடங்கியும் கோரமடங்காமல், இரத்தம் பார்க்கும் ராணுவ வேட்டைகளின் கொல்லப்பட்ட ஒரு சிலரைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம். தினம் தினம் உடலில் உயிர் இருந்தாலும் நிர்வாணமாய் அலையும் ராணுவப் பசிக்கு இரையான எத்தனை என் தோழிகளை அவர்களின் உணர்வுகளை இன்னும் எத்தனை நாள் சுமக்க போகிறோம்.

ஆண்குறியோடு அலையும் ராணுவத்திற்குள் பிரிவுகள் இல்லை. உலகின் எல்லா ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் தங்கள் பசியை அடக்க கிடைத்த ஒரே வழி பெண்கள்.

80 களின் இறுதிப் பகுதிகளில் ஒரு நாள் என் காது கேட்க என் அம்மாவிடம் பக்கத்து வீட்டு அக்கா கதறியபடி ஏதோ சொல்லி கொண்டிருந்தார். அதற்கு சற்று முன்னர் தான் இந்திய ராணுவத்தால் 3 மணி நேரமாய் என் கிராமம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அண்டைக்கு ஒலிக்க தொடங்கின அந்த கதறல் குரல் இன்னும் எனக்குள்ளை ஒலிக்குது.

சமாதானம் சமாதானம் எண்டு நாலு வருசம் ஆடின நாடகத்தில பார்வையாளராய் இருந்த எங்கடை சனம் எல்லாம் இப்ப மரணத்தின்ர பிரதான பங்காளியாய் மாறிப்போயிருக்கு. ஆனா அந்த நாடகத்தில நடிச்சவைக்கு இருக்கிற பாதுகாப்பு நாடகத்தை பாத்துக்கொண்டிருந்த சனத்துக்கு இல்லை.நாடகம் நடக்கேக்கை வெறியோடை பாத்துக்கொண்டிருந்த ராணுவம் இப்ப வேட்டையாடத்தொடங்கிட்டுது. வேட்டைக்காரனுக்கு இப்ப வேட்டை இலக்கில்லை. கைக்குள்ளை அகப்படுற எல்லாத் தமிழரின் இரத்தங்களையும் பெண்களின் உடல்களையும் ஆண்குறி ஏந்தி திரியும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் ருசிக்கத் தொடங்கி விட்டன.நாலு வருச சமாதான காலத்தில வீதியில போற எங்கடை பொம்பிளைப்பிள்ளையளை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஆண்குறி பிடித்தபடி பாத்தக்கொண்டிருந்த 'வெறிலங்கா'ப்படைகள் மன்னிக்க வேணும் "சிறிலங்கா"ப் படைகள் இப்ப தங்கள் ஆண்குறி அடக்க ஆணுறைகள் சகிதம் வேட்டையாட புறப்பட்டு விட்டன.

விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த பெண்கள் படையணிகளை உலகம் வியக்க உருவாக்கினர். வேட்டையாடும் வெறிகார ராணுவத்தை அடக்க பல வெற்றி சமர்களை நடத்தியது. ஆனாலும் இண்டைக்கும் இந்தக்கணத்திலையும் குருதிக்குள் உறைந்து போன என் அக்காளின் கோரப் பிணத்தை பார்க்கும் துரதிஸ்டம்...
என்னைக் கேட்டால் ஆயுதம் தூக்கின என்ர அக்காக்களே, தோழிகளே, தங்கச்சிகளே, முடிஞ்சால் அடியுங்கோ.. தயவு செய்து ஆண்குறியோடு அலையும் ராணுவ வெறியர்களுக்கு எங்கடை பெண்களை தேடியலைய நேரம் குடுக்காதேங்கோ..வன்னிக்குள் எல்லோரும் போய் ஒழிய முடியாத யதார்த்த சூழலில் ஓநாய்களின் காவலில் நாங்கள் வாழுகிறோம். அவர்களுக்கு பசிக்கிற போதெல்லாம் எங்கள் பெண்களை புசிக்கலாம். குழந்தைகளின் இளம் குருதி குடித்து கூத்தாடலாம். இது கோரம்..இதை பேசுகிற போது கோவத்தையும் விரக்தியையும் தவிர எதுவும் செய்ய முடியாத வெறும் கையாலாகததனம் மட்டுமே மிஞ்சி நிக்கிறது.. .

எங்கள் இணைத்தளங்களினதும் பத்திரிகைகளினதும் இடங்களை நிரப்ப , இனியும் இந்தப் படங்கள் வேண்டாம். ஐயோ.. என நாங்கள் வைக்கும் ஒப்பாரி உலகத்திற்கு கேட்பதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு இருக்கெண்டு எனக்கு தெரியேல்லை. ஒரு வேளை உலகில் நடக்கும் இந்தக் கோரங்களைப் போன்ற கோரங்களுக்குள் என் வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து வீறிட்டெழும் அலறலும் அடங்கிப் போகலாம்.

இதுக்குமேல பேச எதுவுமில்லை..

இன்னும் எத்தனை நாள் என்ரை பேனாவுக்குள்ளை இரத்தம் ஊத்தி எழுதப்போறனோ தெரியேல்லை..

இவ்வளவு நேரம் எழுதினது வார்த்தையில்லை..
என்ர வலி இது எங்கடை இனத்தின்ர வலி..


ஜனாதிபதி மகிந்தவுக்கு:தயவு செய்து உங்கடை ராணுவத்திற்கு ஆண்குறி அடக்க ஏதாவது வழி செய்யுங்கோ..இரணுவத்தினரை மட்டும் இதுக்கு குறை சொல்லேலாது.. அவையள் கூலிக்கு மாரடிக்கினம். புலிகள் மாதிரி போராளிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில இருந்து தன்ர ஊருக்கு போகேலாமல் தன்ர மனிசியை பாக்கேலாமல் விரக்தியோடை இருக்கிறவைக்கு ஆண்குறி அடக்கிறதுக்கு என்ர உறவுகளை பலியாக்க வேணாம். எதுக்கெல்லாமோ பாதுகாப்பு கவுண்சிலையோ சர்வ கட்சி மாநாட்டையோ கூட்டுறனிங்கள் இதுக்குமொருக்கா கூட்டிப்பாருங்கோ.. கொழும்பில கூத்தாடுற மேற்தட்டு வர்க்கம் பாதுகாப்பா தாகம் தணிக்குது. அங்கை பாதுகாப்பு படைக்கு வெறியெடுக்குது. அவங்களுக்கும் தாகம் தணிக்க ஒரு அமைச்சை உருவாக்கி அமைச்சரையும் போட்டு ஏதேனும் செய்யுங்கோ.. தயவு செய்து உங்களின்ர கொண்டாட்டங்களுக்கு எங்களை பலியெடுக்காதைங்கோ..

புலிகளை நிர்வாணப்படுத்தி காட்சிக்கு வைத்த வன்மம் நிறைந்த இராணுவமும்.வன்மத்தை ரசிக்க சிங்களவர்களை பழக்கப்படுத்தும் சிங்கள அரசும் தன்னைத் தானே அழித்துக்க கொள்ளும் ஒரு வன்முறைச் சமுகத்தையே உருவாக்கும்.புத்தரின் புனித அரசமரம் உள்ள அநுராதபுரத்தில் நடந்த வன்மம்>

இக்கட்டுரை மீள்பதிவிடப் படுகிறது.

Tuesday, October 23, 2007

யாழ்ப்பாணியும் மட்டக்களப்பானுமாகிய நான்.

காட்சி 1
இடம் -மட்டக்களப்பு

நான் அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.மட்டக்களப்பின் வடக்குப்புறத்தே வாழைச்சேனைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே ஏறாவூர் என்று ஒரு ஊர் இருக்கு அது பாதிக்குப் பாதி முஸ்லிம்களையும் தமிழர்களையும் கொண்ட ஊர்.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருந்த ஊடலையும் உறவையும் கொலைகளையும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சொல்லுகிறேன்.இப்போது சொல்லயிருக்கிற கதை வேற கதை.

கிழக்கிலங்கையில் ஏறாவூர் காளிகோயில் பிரசித்தமான ஒன்று.தட்டார்கள் எனப்படும் விஸ்வகர்ம குலத்தினரால் நிர்வகிக்கப் படும் அந்த கோயிலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளும் அந்த குலத்தினரின் சொத்தாக இருந்தது.அவர்களைத் தவிர யாழ்ப்பானத்தார்களே அதிகம் அந்தப் பகுதியில் இருந்தனர்.யாழ்ப்பாணத்தார் என்றால் வெள்ளாளர்தான் பெருமளவில்.பருத்தித்துறை,வியாபாரிமூலை(இது பருத்திதுறைக்கு பக்கதிலதான் இருக்கு)மற்றும் தீவக காரர்கள்தான் அதிகம்.

இந்தப் பகுதியை 4 ம் குறிச்சியெண்டும் சொல்லுவார்கள்.5ம் குறிச்சி ஏறாவூரின் அடுத்த பகுதி இதுவும் தமிழர் வாழும் பகுதி.1 ம் 2 ம் 3ம் குறிச்சிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.

அண்டைகொருநாள் பள்ளிக்கூடத்தில படித்துக் கொண்டிருந்தன். யாழ்ப்பாணி உன்னை வெட்டணுண்டா.....எனக்கு தெரிந்தவரையில் அது -----(பெயர் சொல்லாமல் விடுறன்) அக்காவின் குரல்தான்.(அவவுக்கு ஒரு 45 வயதிருகலாம்) எங்கட பள்ளிக்கூட வகுப்பறை வரை குரல் கேட்டது.காளி கோயில் திருவிழா காலத்தில் மட்டும் அவவுக்கு குரல் அடைக்கும் மற்றம் படி நல்ல குரல். இப்பிடித்தான் அடிகடி ஏதாவது சண்டை வந்தால் யாழ்ப்பாணி என்ற குரல் பறக்கும்.

மட்டக்களப்பில் உள்ள பெருமளவு பலசரக்கு கடைகளும் மொத்த விற்பனை நிலையங்களும் யாழ்ப்பாணத்தவர்களுடையதே. ஏறாவூர் அதற்க்கு அண்டிய செங்கலடி போன்ற இடங்களிலும் இதே நிலையென்பதாலும் கோயில்களில் இருந்த யாழ்ப்பாணத்து பிராமண ஐயர்களின் ஆதரவில் யாழ்ப்பானத்தவர்களுக்கு கிடைத்த முன்னுரிமையும் ஏறாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு எரிச்சலூட்டியதில் வியப்பில்லை.

இப்பிடியான சூழலில் நான் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 3 ம் வகுப்பு படிச்சுக் கொண்டிருந்தன்.(ஏறாவூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் என்றும் உண்டு இது அலிகார் மகா வித்தியாலயம் என்றும் சொல்லப் பட்டது) அப்ப நான் நல்ல கெட்டிக்காரன்?! வகுப்பில முதல் மாணவன் (இப்ப ? ). இப்படியிருக்கையில் 3ம் வகுப்பில் புதிய வகுப்பு ரீச்சருக்கு என் மீது
ஏனோ கோபம். நான் நல்ல எழுதினாலும் திட்டுவார். இப்பிடி அவவைப் பிடிக்காமலே என் மூன்றாம் வகுப்பு ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் பள்ளிக்கூடத்தில நிண்ட இலந்த மரதில இலந்தப் பழம் பறிச்சு சாப்பிட்ட 10 மாணவர்கள் மாட்டுப்பட்டம் கையும் மெய்ய்யுமாக .(இலந்தப் பழம் புளியம் பழக் கோதுபோல கோதுடைய உருண்டையான திராட்சை அளவு பருமன் உள்ள பழம் புளிப்புச் சுவை) ஆனால் என்னை மட்டும் அம்மாவைக் கூட்டிவரச் சொல்லி பேச்சும் கொடுத்தார். நாட்கள் இப்படி நகருகையில் மேலை வகுப்பு மாணவ்ர்கள் என்னை யாழ்ப்பாணி என்றும் பனங்கொட்டைசூப்பி எண்டு சொல்லுவதும் எனக்கு எரிச்சலூட்டியது. ஆனாலும் என் சக தோழர்கள் என்னை அப்பிடிச் சொன்னதில்லை.
இப்படியே எனது 3ம் வகுப்பு முடிந்த போது 4ம் வகுப்புக்கு போவதற்க்கு முதலே டிசம்பர் விடுமுறையில் படிப்பதற்க்கு பாடப் புத்தகங்கள் தருவார்கள்.அது பெரும்பாலும் முன்னர் படித்த மாணவர்களின் பழைய புத்தகங்கள்(இலங்கையில் அரசாங்கத்தினால் சகல மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகம் வழங்கப் படும்) வகுப்பில் முதலாவதாக வரும் மாணவனில் இருந்து கொடுக்க ஆரம்பித்து புத்தகம் தீரும் வரை உள்ள மாணவர்களுக்கு கொடுப்பார்கள்.ஆனால் எனக்கு கொடுக்கவில்லை.காரணம் அந்த ரீச்சருக்கு என் மீதிருந்த கோபமே.

என் வகுப்பு தோழர்களுக்கு எனக்கு தராதது வருதமாக இருக்க என் தோழன் ஒருவன் ஏன் ரிச்சர் சோமிக்கு புத்தகம் கொடுகலை என்டு கேட்டான். யாழ்பாணியள் இங்கவந்து படிச்சு உங்கலை முந்துவாங்கள் நீங்கள் வழிசல்கள் மாதிரி வாய் த்துக்கொண்டிருங்க.....என்றார் சத்தமாகா..

காட்சி-2

இடம் -யாழ்ப்பாணம்

சாவகச்சரியில் இருக்கும் அந்த ஊர் எனது அம்மாவின் சொந்த ஊர். நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மட்டக்கலப்பில் இருந்து வந்தவன் எண்ட படியால எல்லாரும் சற்று தள்ளியே இருந்தார்கள்.இருந்தாலும் நளவர் வீட்டுப் பிள்ளைகள் இருக்கும் வங்குக்கு என்னை அனுப்பாமல் விட்டதில் அம்மவின் சொந்தகாரரான அந்த ரீச்சருக்கு பெரும் பங்கு உண்டு.

அவள்தான் அந்த வகுப்பின் முதல் மாணவி நல்ல அழகு துறு துறுவென இருப்பாள்(அவள் பற்றியகதை பெரும்கதை அது 12 வருசக் கதை அதைப் பிரகு சொல்லுறன்) அந்த பள்ளியில் செர்ந்த முதல் தவணைத் தேர்விலேயே நான் 2ம் மானவனாக வந்தேன்.இரண்டாம் தவணையும் இதை தக்க வைத்துக் கொண்டேன்.ஆனாலும் என்னுடன் அவ்வளவாக யாரும் சேருவதில்லை.பள்ளர் பிள்ளைகள் மட்டும் என்னுடன் கொஞ்சம் பழகினர்.

மூன்றாம் தவணையில் நாந்தான் முதல் மாணவன்.தேர்வு மதிப்பெண் அட்டை கிடைத்தது எனகு மட்டும் மேடையில் கொடுத்தார்கல் முதாலம் பிள்ள்ளைக்கு அப்பிடி கொடுபது மரபு.5ம் வகுப்பு தொடங்கியது வகுப்பு ரீச்சர் மாணவகளுக்கு அட்வைஸ் கொடுத்தார் ஸ்கொலஸிப் வக்குப்பு நல்ல படிக்கவேணும் அங்க பாருங்க அவன் மட்டகளப்பான் அங்க படிச்சிட்டு வந்து உங்களை முந்திட்டான் ......என்று தொடர்ந்தது அவர் பேச்சு...அவள் என்ன நோக்கி நக்கலாகச் சிரித்தாள்...
அடுத நாளில் இருந்து நான் பள்ளிக்கு கட் அடித்தேன்...என் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரிட்டசையை மட்டக்களப்புக்கு போய் எடுத்தேன்.எனது பள்ளியில் நான் மட்டுமே சித்தியடந்தேன்.வழமையாய் பாரட்டு விழா வைக்கும் அந்த பள்ளிக் கூடம் இம்முறை அப்படியொரு விழாவை வைக்கவில்லை.நான் மட்டும் பள்ளி முழுவது சொக்லேட் கொடுதபடி இருந்தேன்....

இன்னொரு விசயம் நான் யாழ்ப் பாணத்தில 5ம் வகுப்பு படித்த போது புலிகளின் பேச்சுப் போட்டியில் தென்மராச்சியில் முதல் பரிசு வாங்கி புலிகளுக்காக பல இடங்களில் பேசித்திரிந்தேன்...அப்போது அந்த சின்னவயதில் எங்களூரில் பேசும் போது அவளின் அப்பாவ
ன் கையப் பிடித்தபடி அவள் என்னைப் பார்த்த பார்வை இப்போது வரைக்கும் நினைவிருக்கு நான் நினைகிறன் அவளுக்கு முன்பிருந்த வெறுப்பு இப்போது இல்லையென்றூ

Sunday, October 21, 2007

நான் ராமன்- சு.ஸ்டார் ரஜனி ஆவேசம்

நான் ராமன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என சு.ஸ்டார் ரஜனி சவால் விட்டார்.சண் குழும தொலைக்காட்சி நேற்று இதனை ஒளிபரப்பு செய்தது.மிகப் பரபரப்பான சூழலில் ரஜனி இதனைத் தெரிவித்தார்.

நீ இராவணன் நான் ராமன் உன்னை அழிச்சு உங்கிட்ட இருந்து இந்த மக்கள காப்பத்துரதுக்குதாண்டா நா வந்திருக்கன். ரசனி திரும்பி நடந்தார். பாட்சா.... பாட்சா....
என்று பின்னணியில் கேட்க பரிவாரங்கள்.ரசனி பின்னால் திரும்பி நடக்கத் தொடங்கின.

சினிமா விருது விழாவில் கலைஞரிடம் ராமர் க்கு ஆதரவாக பேசியதற்க்கும் இதற்கும் என்ன தொடர்பும் இல்லை. ஒரு தசாப்தம் முன்பாக பாட்சா படத்தில் ரகுவரனைப் பார்த்து அன்வரின் நண்பன் மானிக் பாட்சா சொல்லும் டயலொக்.கே டிவி யில் நேத்துதான் முழுசா பாட்சா படம் பாத்தன்.


அட கருமாந்திரம் பிடிச்ச பயலுகளா அதுக்கு அந்த படம் வாரதுக்கு சில வருசம் முன்னாடிதானே இந்த ராமர் பெயரால அத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் பாபர் மசுதி இடிக்கப்பட்டும் பக்தி மெய்பிக்கப் பட்டது.

அண்ணா ரசனி, நாடடு நடப்புகளையும் மக்கள் எண்ணங்களையும் அப்பப்ப ரிவி ,பத்திரிகைகளை யும் பாருங்க. சும்மா பூச்சாண்டி காட்டுறதும் நல்லதில்ல கண்ணா சாரி அண்ணா.

கமலின் தென்னாலி பாத்த பிறகுதான் இலங்கயில் இத்தனை கொடுமை நடப்பது தெரியுமென்று சொன்னதைபோல தமிழ்நாட்டு பிரச்சனையிலும் கருத்து சொல்லிடுவிங்காளோண்ணு பய்மா இருக்கு. அவரின் பக்த கொடிகளா மன்னிக்கவும் கோடிளா நீங்களாவது உருப்பட்டா சரிதான்

எங்களூரில் வெள்ளாளரும் பள்ளரும்...

எங்களூர் தென்மராட்ச்சியில் இருகிறது.அதை எங்களுர் எனபதை விட என் அம்மாவின் ஊர் என்பதே பொருத்தம்.நான் ஒருவருடத்திற்க்கும் சற்று அதிகமான காலம் அங்கிருந்திருக்கிறேன்.வெற்றியாகச் சொல்லவேண்டுமானால் யாழ்கோட்டை இயக்கத்தின் ஆழுகைக்குள் வந்த போது அந்த ஊருலேயே இருந்தேன்.

கோட்டை பிடித்தபோது சீனவெடி வெடித்த அண்ணாகள் பின்னால் ஓடியிருகிறேன்.வீட்டில் முன்னர் இயக்கத்தில் இருந்த என் மாமா இந்திய இராணுவத்துக்கு பயந்து மண்ணில் புதைத்து வைத்திருந்த புலிக்கொடியை அப்போதுதான் நான் தோண்டி எடுத்தேன்.
என்கொரு பெருமை, கோட்டைபிடித்த சேதி வந்த அந்த மாலைப் பொழுதில் சந்தியில் ஏற்றிய புலிகொடி நான் தோண்டியெடுத்து கொடுத்தது என்பதில்.
அந்த சந்தியில் மூன்று மாவீரர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தது அதில் ஒருவர் பள்ளர் மற்றயவர்களைப் பற்றி தெரியாது."அந்த பள்ப்பெடியன்"(இப்பிடித்தான் ஊருக்குள் சொன்னார்கள் அதனால்ததன் எனக்கு அவர் பள்ளரெண்டு தெரியும்) மேஜர் தரம் என்று நினைவு.அவரின் பெயரை அந்த ஊரின் பெருந் தெருவுக்கு வைத்திருந்தார்கள்.

பெருமளவு வெள்ளாளர்களைக் கொண்ட அந்தப் பெருந்தெருவுக்கு அவர் பெயரை வைத்தது பற்றி
ஊரி சத்தமில்லாமல் பேச்சடிபட்டது.சத்தம் போட்டு சாதி சொன்னால் 3 மாதம் பங்கர்.இப்பிடித்தான் ஒருத்தர் பள்ளன் தேங்காய் களவெடுத்துப் போட்டான் எண்டு சொன்னதுக்கு இயக்கம் களவெடுத்தவனை விட பள்ளர் என்று சொன்னவனுக்கு அதிக தண்டனை கொடுத்ததாம்.! இது மாதிரி நிறையச் சேதி வாறதால சனம் கப்சிப்.

ஆனாலும் சண்முகம் ரீச்சர் நான் படிச்ச அந்த வகுப்புல வெள்ளாருக்கு மட்டும் தனியா வகுப்பு முடிஞ்சதும் சொல்லிகொடுப்பா.அத விடுவம் வெள்ளாளர் வீடுகளுக்குள்ள பள்ளர் வாரது எங்கள் ஊரில் இப்பவரைக்கும் இல்லைத்தான்.இப்ப சில இடங்கலில் வரவேற்பறை வரையும் வரவிடுகினம்.ஆனால் புழங்குறதில்ல.அதென்ன புழங்குறது எண்டுறியளோ அதுதான் கொடுக்கல் வாங்கல் செய்யுறது.

ஊர் இப்பிடி இருக்கையில நான் மட்டக்களப்புக்கு வந்துட்டன். சண்டை உச்சமடைய, இருந்த வெள்ளாளரில பாதிப்பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட வெள்ளாளர் எண்ணிக்கையில் குறையத் தொடங்கினர்.பள்ளர் இளைஞர்களும் வெளிநாட்டுக்குப் போனார்கள் ஆனால் வெள்ளாளரைப் போல குடும்பம் குடும்பமாகப் போகயில்ல.இப்ப வெள்ளாளர், பள்ளரையும் நளவரையும் மற்றசாதியினரையும் விட அதிக எண்ணிகையில் இல்லாமல் போனார்கள்.

வெள்ளாளக் காணிகள் பள்ளருக்கு அதிக விலையில் கனடாவிலோ சுவிசிலோ வைத்து கைமாற்றப் பட்டது. சில வருடங்கள் முன்பு திருச்சியில் நடந்த ஒரு செத்த வீட்டில் இப்பிடி பள்ளருக்கு காணிவித்தது தொடர்பாக இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தேன்.இருவருமே பக்கத்துப் பக்கத்துக் காணிக்காரர்.ஒருவர் தனது காணியைப் பள்ளருக்கு வித்ததால் மற்றவரின் காணி மதிப்பு இறங்கி விட்டதே சண்டையின் பிரதான கருப் பொருள்.

இந்த சண்டையில் ஒருவர் சொன்னார் " பள் பெடிகளுக்கு இப்ப பணம் வந்துட்டுது.அதுதான் ஊரில ஒரு காணிவிடாம வாங்குறாங்கள்.எங்கடயதுகளும் காசுக்காக மரியாதையப் பாக்காமல் நளம் பள்ளுகளூக்கு காணியை விக்குதுகள்" இதையடுத்து இன்னொருவர் சொன்னார்" உவங்கள் அறுவாங்கள் எங்கட வீடுகளை வாங்கி எங்கயிருந்தொ வந்ததுகளையெல்லாம் போராளி குடும்பம் மாவீரர் குடும்பம் எண்டு குடியமத்திப் போட்டாங்கள்."

அட இதை விடுங்கோ இப்ப ஊரில நடந்த ஒரு கூத்தைப் பாத்தியளோ! என்று செத்தவீட்டுக்கு வந்த இன்னொருவர் பேசத்தொடங்கினார் அவர் சிலமாதங்களுக்கு முன்னர் இந்தியா வந்தவராம்.
" முதல் ஊரில 'அதுகளும்' ரியூசன் எண்டால் எங்களிட்டதானே வரோணும்.இப்ப என்னாடாவெண்டால் 'அதுகளிண்ட' இடத்தில போய்த்தான் எங்கட பிள்ளையளும் படிக்கோணும்.'அதுகள்' நடத்திற ரியூசந்தான் பெரியது அவங்கள்தான் நல்ல மாஸ்டர்மரும்.அது சரியெண்டு சாதிபாக்கமல் பரவாயில்லையெண்டு நாங்கள் அனுப்பினம்.படிச்சால் சரிதானே சாதியில என்ன கிடக்கு.

ஆனால், அவங்கள் ஒரு நடைமுறை கொண்டந்தாங்கள் பெற்றார் ஆசிரியர் சந்திப்பெண்டு.அது நல்ல விசயம் மெண்டு போனால், சந்திப்பு முடிஞ்சதும் சாப்பாடு எல்லாருக்கும். அவங்கள் சமைச்சதை அவங்கட ஆசிரியர்மாரும் எல்லாப் பிள்ளையளும் பெற்றாரும் ஒண்டாயிருந்து சாப்பிட வேணுமாம்" அவர் கூறி முடித்தார்.

அப்ப நீங்களும் சாப்பிட்டனியளோ? மற்றவரின் கேள்வியில் நக்கல் இருந்தது. "பின்ன சாப்பிடாமல் வரமுடியுமே.பிள்ளையள் படிக்குது.அடுத்தடுத்த மாதாங்களில போகாமல் விடுவம் எண்டால் கட்டாயம் பெற்றார் வரொணுமாம்.அடுத்தமுறைக்கு நான் போகாமல் மனிசியை அனுப்பிவிட்டன்!"


குறிப்பு;

*ஈழத்தில் சாதியென்பதே இல்லை.இல்லாததைப் பற்றிப் பேசக்கூடாது.

*கலியாணத்தில் மட்டும் சாதி பாக்கிறார்கள் மற்றம்படி சாதி இல்லை.

*வன்னியில் சாதி என்பதே இல்லை.

*புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியை வளர்கிறார்கள்.

*யாழ்ப்பாணத்தில் சில இடங்கலில் மட்டும் சாதி உள்ளது.

* இந்தியாவைப் போல் ஈழத்தில் சாதிய அடக்கு முறைகள் இல்லை.

*இந்தியாவில் சொல்வதைப் போன்ற 'தலித்' என்றபதம் தேவையற்றது 'பஞ்சமர்' என்பதே போதுமானது

மேற் கூறபட்ட சொற்றொடர்கள் என் கண்ணுக்கு கவர்ச்சியாகப் பட்டவை.அதனை சும்மா 'உஷா''துணை' குறிப்பாக தந்துள்ளேன்.

முக்கிய குறிப்பு:
இப்ப இயக்கத்தின் முக்கிய அரசியல் பொறுபுகளில இந்த ஊர் பெடியள்தான் இருகினமாம்.இன்னொன்று, முன்னர் சில பெரிய அடிபாட்டு காரரும் இந்த ஊர்க்காரத்தான்

Tuesday, October 09, 2007

இரசாயனக் கம்பனிகளின் பலிக்களம்-ஒரு ஆவணப்படம்

"கடலூரைக் காப்போம்" என்ற ஆவணப் படமொன்று 'நிகரி' திரைப்பட வட்டத்தினரால் தயாரிக்கப்பட்டது.கொழும்பு மற்றும் சென்னையில் இயங்கும் நிகரி திரைப்படக் குழுவும் ,சென்னையில் உள்ள சமூக மாற்றத்திற்க்கான இளைஞர்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் மிகக் குறைந்த செலவில் ஒரு மிதிவண்டிப் பேரணியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.

சரி,ஒரு அவலம் நிறைந்த மக்களின் கதைகளை இனிக் கேளுங்கள்.

(இது முழுமையான படமல்ல சில பகுதிகள் விடுபட்டுள்ளன.)




Saturday, July 14, 2007

9th Madurai Documentary and Short Film Festival 2007

Dear Friends

Greetings from Marupakkam, a media action group based in Madurai involved in organising regular screenings, video workshops and film festivals since 1996. We also make documentaries.

We are happy to inform you that our 9th Madurai Film Festival will be organised on 2-6 December 2007 in Madurai.

The festival is jointly organised by 15 organisations including educational institutions, voluntary organisatons, media groups and film societies.

The festival will be a non-competitive one with no entry fee. There is no limit for duration of the films.

Short films and documentaries produced after January 2006 are eligible to take part in the festival.

The films in non-tamil, non-English language should have subtitles in English.

Films will be screened under three sections: Tamil 2) Rest of India 3) Foreign Films

We invite the film makers to send their entries on DVD format with synopsis, filmography, stills, posters and other publicity materials on or before 30 September 2007.

A Selection committee consisting of filmmakers, writers, teachers, activists, artists and students will select the best 80 films in total (including Tamil, Rest of India and Foreign short films and documentaries) to be screened in 10 venues.

The selection committee’s recommendation will be declared on 31 October 2007. Festival will not return the dvd’s as they will be used for further non-commercial screenings in and around Madurai, India.

We invite the filmmakers to send their entries to the following address:

Marupakkam,
A 9/4 K.K.Nagar, Madurai 625 020, India
Ph: +91 9344479353; +91 9344156392; +91 452 2523992
Email: marupakkam@rediffmail.com

We also have a retrospective section under which 10 best films (5 each) of two veteran documentary film makers will be screened.

Besides Magic Lantern Foundation, New Delhi will screen 10 films from their Under Construction collection.

Amudhan R.P.
9th Madurai Documentary and Short Film Festival 2007

Tuesday, June 26, 2007

மாமா ஆகிவிட்டேன்.. இப்ப மாமாதான் ஸ்பெஸலுங்கோ?!

(அசுரன்,வரவையான் உள்ளிட்டவர்களின் மாமாப் பதிவுகளுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை)

தமிழ்மணத்தில் இப்ப ஆளாளுக்கு தங்களுக்கு பிடிகாதவர்களை மாமா என்று அன்பின்பால் அழைக்கும் நிலையில் நானும் மாமா ஆகியிருகிறன்.உண்மையில் மாம என்ற அந்த இரண்டு எழுத்துக்களுக்குதான் எத்தினை மதிப்பு.

எங்கட வீட்டில நிறைய மாமாக்கள்.அவர்களில் மூத்த மாம எண்டு ஒருத்தர் இருப்பார்.அவரில் எல்லருக்கும் நல்ல மதிபிருக்குமுங்க.ஆனாலும் என்ர தாத்தாவுக்குதான் பெரிய மதிப்பு தாடிவைத்து கையில் தடியோடு சாய்வு நாற்காலியில் இருக்கும் தாத்தா தனது பிள்ளைகளில் கண்டிப்பானவர்.பிள்ளைகளைக் கட்டுப்பாடக வளர்த்தார்.ஆனால் அவர் நல்ல மாமாவாக இருந்தார் எண்டு அம்மா சொன்னா.தாத்தாவின் இரண்டு தங்கைளின் பத்துப் பிள்ளைகளுக்கும் அவர்தான் மாமா.

மாமாவான தாத்தா தனது தங்கைகளின் பிள்ளைகளுக்கு தனது வீட்டில் இருந்தே தேவையானவற்றையெல்லாம் கொடுத்தார்.தாத்தாவின் பிள்ளைகளைவிட தாத்தவின் மருமக்கள் அதிக அதிகாரம் செலுத்துபவர்களாக இருந்தனர்.

என்ர மூத்த மாமா பற்றி சொன்னன்.அவர் செரியான கண்டிப்பு.எங்களிலயும் கண்டிப்பாக இருப்பார்.ஆனால் அவரின் பிள்ளைகளுக்கு நல்ல செலவு செய்வார்.அவர் ஒரு பழைய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இப்ப தன்ர மூத்த பிள்ளையை லண்டனிலும் ரெண்டாவதை அமெரிக்காவிலும் செட்டில் பண்ணிவிட்டு பிரான்ஸில் இருகிறார்.அங்கதான் 20 வருசம் இருகிறார்.கமியூனிசம் கலியாணம் முடிக்கும் வரைதான் அதுக்குபிறகு பொறுப்புக்கள் வரும்போது அது சரிவராது என்பார்.நான் அமெரிக்காவை எதிர்க்கோணுமெண்டால் கலியாணம் முடி இந்த வருத்தம் சரிவரும் என்பார்.

மூத்தமாமாதான் எனக்கு தமிழ் உணர்வு பெரியாரியம் எல்லாம் சொன்னவர். நான் இங்கிலிஸ் வகுப்புக்கு கட் அடிச்சுப் போட்டு தமிழ் தமிழெண்டு திரியேக்க அவர்ட பிள்ளளயள் லண்டன் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள். "தம்பி தமிழ் உனக்குச் சோறு போடாது பேசம இங்கிலிஸில டெவலோப் பண்ணிட்டு அமெரிக்கா போக முடிந்தால் போ" என்கிர அவரின் அலோசனைக்கு இப்போது எங்கள் எல்லா மாமாக்களிடமும் நல்ல மதிப்பிருக்கு.குடும்பச் சண்டைகளில் மூத்த மாமாவோடு மல்லுக்கு நிக்கும் மற்ற மாமாக்கள் இந்த மாதிரி விசயத்தில் அவரி எதிர்ப்பதில்லை

எனர மற்ற மாமாக்களும் தமிழ் தேசியத்துக்குள் வளந்தவர்கள்தான்.மூத்தமாவைப்போல் கம்யூனிசத்துக்குள் இருந்து வராமல் நேரடியாக தமிழ்தேசியத்துக்குள் வந்தவர்கள். திராவிட இயக்க செல்வாக்கு அவர்களிடம் இப்போதும் இருக்கிறது.

ம்...இதில தமிழ்நாட்டிற்க்கு வந்த பிறகு கூடப் படிகிறவனில் இருந்து கூட்டிக்குடுகிறவன் வரைக்கும் பொலிஸ் மாமாக்கள் ஈறாக பல மாமாக்காளைத்தெரியும்.

இதை எழுத என்ன காரணமுன்னா என்னோட ஒண்ணுவிட்ட அக்கா ஒருத்திக்கு பொண்ணு பிறந்திருக்குது அதனால நான் இப்பா மாமாவாகிட்டனுங்கோ..

சரி, அசுரன் உள்ளிட்டவர்கள் எப்படி மாமாக்களை தீர்மானம் செய்கிறார்கள் எனபதி எனக்கும் சொன்னா நானும் இனி அவங்கள மாதிரிப் பதிவு போடுறன்

Wednesday, May 30, 2007

ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்

புத்தரின் படுகொலை


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்


ப்பத்தியாறு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார்.அவருக்கு கிடைத்த அதே செய்தியை
யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள்.ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது.அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை.ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் ,ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன.

யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது..சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா,வண. லோங் அடிகள்,இந்திய தூதுவராலய செயலர்,அமெரிக்கதூதுவர்,பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள்,பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது.இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில்
யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது.பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிபினாலும் உருபெற்ற நூலகம் கம்பிரமாக தலை நிமிர்ந்து நின்றது

யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம்.தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது.11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது.யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்புமையங்கள்,சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று..

ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது.இளைஞர்கள்
கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும் ,நூலகங்களும் மாறியிருந்தது.சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.

சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர் மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது.அவர்கள் தருணம் பார்த்திருந்தனர்.1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்க்கள் தமிழர் கல்வி ஆதரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது .
1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சரத்தில் இருந்த பொலிசார் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப் பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும்,கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட
சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.

யாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது,தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு ,மகிழூர்ந்து என்பன தீக்கிரையாக்கப் பட்டன.1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கோண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல்
தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்க்கும் தீ வைக்கப்பட்டது.அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது.எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.

தீ யாழ்ப்பாண நகரமெங்க்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்க்கு மூலையில் முதல் தீ வைக்கப் பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவது தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்
துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர்.தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.

யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது.அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள்.கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக் காணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில்
தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின்நெருக்கத்திற்குரியவர்களுமான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசு விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர்.1983 தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும்.தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களும். இவர்களின் ஏற்பாட்டில்யே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர்.இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில்
சனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார்.

ஒரே நாளில் மொத்த யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து சிங்கள அரசு வைத்த தீ தமிழரின் உரிமைத் தீப் பிளம்பாக மாறியது.அந்த தீ இன்று கொழுந்துவிட்டு இலங்கையெங்க்கும் எரிகிறது.ஈழத் தமிழரின் தேசிய அடையாளதின் மீது நிகழ்ந்த ஒரு படுகொலையாகவே காலம் முழுவதிலும் யாழ் நூலக எரிப்பு சொல்லப்படும்.
யாழ் நூலகம் பற்றிப் பேசுகிறபோதெல்லம் இப்போதும் பலர் அழுவார்கள்.

உலகில் எந்த வன்முறை பிரதேசத்திலும் நிகழ்ந்திராத ஒரு கொடுமையினை சிங்கள அரசு நிகழ்த்திக்காட்டியது.ஒரு அரசே தனது நாட்டின் மிகப் பெரும் நூலகத்தை எரிகிறதென்றால் அதன் வன்முறை உணர்வு எத்தனை உச்சமாக இருக்கும்.

1984 இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின்
பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பத்திரங்களைப் பெறலாயிற்று.இந்த கட்டுரையை எழுதும் இந்த கணம் வரைக்கும் நூலகம் இராணுவதினரால் சுற்றிவளைக்கப்பட இராணுவ
அதி உயர் பாதுகாப்பு வலையதுக்குள்ளேயே இருக்கிறது.

இப்போது சர்வதேசகக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டியிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவதற்கு உதவின. பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர்.இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.
இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம் ஒரு படுகொலையின்
சமாதியாகவே இருகிறது இப்போது மீளவும் கட்டப் பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே.முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை.பெருமபால பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம்
தனித்தே இருகிறது.அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளது.


(இக்கட்டுரை அப்பால் தமிழ் இணையத்தளம் மற்றும் தமிழ் ஓசை பத்திரிகைக்காக எழுதப்பட்டது) -செளமியன்

Sunday, May 27, 2007

-அப்பா-கனிமொழியின் கவிதை

கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம் அதிசயமானதொன்றல்ல.இந்திய அரசியலில் இது புதுமையும் இல்லை.இதைப் பற்றி ஊடகங்களில் நிகழும் விமர்சனங்கள்தான் புதுமையானது.
அப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை 'அகத்திணை' என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.

அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?


-கனிமொழி

மன்னராட்சியில் ஒருவர் மன்னராக முடிசூடிக்கொண்டால் அவரது சந்ததியில் வாரிசு இல்லாத ஒரு நிலை உருவாகும் போது மட்டுமே வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும்.. இல்லை வாரிசு சிறுவனாக இருந்தால் அந்த வாரிசு வளரும் வரை இன்னுமொருவர் ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாத்து அந்த வாரிசிடம் ஒப்படைக்க வேணும்.

மேற்கூறிய இந்த மன்னர் முறைமைக்கு சற்றும் குறைவில்லாத அதிகார பரிமாற்றமே இந்திய அரசியலிலும் உள்ளது.இந்த அரசியலில் உருவெடுக்கும் பலவாரிசுகளோடு ஒப்பிடுகையில் கனிமொழி விசயமறிந்த பெண் என்றே தோன்றுகிறது.

Tuesday, May 22, 2007

எரிக்கப் பட்ட -யாழ்ப்பாண நூலகம் பற்றிய வீடியோ ஆவணப்படம்

மே 31 நள்ளிரவில் நூலகத்தில் வைக்கப்பட்ட தீ 26 வருடங்கள் தண்டி இன்றுவரையும் எரிந்துகொண்டே இருகிறது.நான் பிறந்து 18 நாட்களில்
எரியூட்டப்பட்ட அந்த நூலகம் குறித்த ஆவணப் படத்தினை எடுக்க வேண்டும் என்ற எனது கனவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல் வடிவம் கொடுத்து வருகிறேன்.

2005 இல் நூலகம் தொடர்பான ஆவணப் படம் ஒன்றினை எடுக்க வேண்டுமென பலரிடம் சொன்னேன்.2006 இல் நூலகம் எரிகப்பட்டு 25 ஆண்டுகள். 97,000 புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் சிங்கள இனவாதத் தீயில் எரிந்து சாம்பலாகின.இது தமிழர் கலச்சாரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலை.

இந்த படுகொலையின் வரலாற்றை பதிவு செய்வது அவசியமாகிறது.நூலகம் ஒன்றின் அவசியம் யாழ்பாணச் சூழலில் உணரப்பட்டு 1930களில் அது உருவாக்கம் பெறறது முதல் இன்றுவரையான நூலகத்தின் வராலறும் தமிழரின் வழ்வியலும் அரசியலும் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்படுகிறது.

இது ஒரு தனிமனித முயற்சியாக தொடங்கினாலும் இதற்கான அனைவரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே இந்த ஆவணப் படத்தை முழுமையானதாக உருவாக்க முடியும்.யாருடைய உதவியுமற்று தொடங்கிய இந்த முயற்சிக்கு சரிநிகர் சிவகுமார் என்னுடன் இணைந்திருந்தார்.இன்னும் இணைந்திருக்கிறார்.பத்மநாப அய்யர்,துவாரகன் ஈழநாதன்.கனேடிய நண்பர்கள் சிலர் என்னை ஊக்கப்படுத்தினர்.

நூலகம் பற்றிய பல சேதிகளும் தகவல்களும் படங்களும் இன்னும் பலரிடம் இருக்கலாம்.அது உங்களிடமும் இருக்கலாம்.அவையெல்லாம் இணைத்ததாகவே இந்த ஆவணப் படம் இருக்க வேண்டும் அதற்க்கு அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை. கடந்த வருடத்தில் மீண்டும் சண்டை சூழ்ந்த சூழலில் மிகுந்த சிரமம் எடுத்து இந்த படத்தை எடுத்தேன்.பண நெருக்கடியும் தகவல்களைத் தேடுவதில் உள்ள நெருக்கடியும் இருக்கும் சூழலில் இந்த முயற்சியை மேற்கொள்ளுகிறேன் இதற்க்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

இன்னும் 20 தினங்களில் இந்த ஆவணப்படத்தினை உங்கல் பார்வைக்கு வழங்க முடியும் என் எண்ணுகிறேன்.உங்களிடம் தகவல்கள் படங்கல் இருப்பின் என்னுடன் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

"எரியும் நினைவுகள்" ( 55 நிமிட வீடியோ ஆவணப் படம்)

யாழ் நூலக ஆவணப் படத்தினை முப் பரிமாணத்தில் நாம் எமது படத்தில் பார்க்கின்றோம்.மூன்று முக்கிய மையப் பொருட்களுக்கு அமைவாகவே 55 நிமிட நேரப் படம் நகர்ந்து செல்கிறது.பண்பாடு ,அரசியல்,சமூகவியல் ஆகிய மூன்று பிரதான அம்சங்களின் பின்னணியில் நூலகம் பார்க்கப் படவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் வரலாறும் நூலகத்தின் கலாச்சார முக்கியத்துவமும்.:
யாழ்ப்பாண நூலகம் தமிழரின் தேசிய காலாச்சார மையமாக மாறியமை,யாழ் நூலகத்தின் உருவாக்கம். திரவிட தனித்துவம் இருக்கவேண்டும் என்பதும் நூலகம் ஒரு அடையாளத்துகுரியதாக இருக்க வேண்டும் மென்ற ஆசையும் நூலக உருவாக்கமும். நூலகம் ஒரு பண்பாட்டு வடிவமாகவும் சமய கலச்சார மையமாகவும் யாழ்ப்பாணத்தாரிடம் உருவெடுத்தமை உதாரணமாக சரஸ்வதி பூசை ஒரு கலச்சார விழாவாக நூலகத்தில் கொண்டாடப் பட்டமை தங்கள் பிள்ளைகள் பரிட்சையில் சித்தியானால் நூலகத்தினுள் பொங்கல் வைத்தல் போன்றவற்ரை கொள்ள முடியும்.இன்றுவரையும் யாழ்பாண நூலகம் ஒரு காலாச்சார அடையாளமாக பார்க்கபடுகின்ற நிலை.யாழ்ப்பாண கலாச்சாரத்தினையும் நூலகத்தினையும் இணைத்து எமது படத்தில் பார்க்க இருக்கின்றோம் .

அரசியலில் நூலகம் :
நூலகம் மூன்று அரசியல் நிலைகளில் இருந்துள்ளது. முதலாவதாக 1960 தில் நூலகத் திறப்பு அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ் மாநகர சபைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது(1959 இல் நூலகம் திறக்கப் பட்டது 61 இல் அல்பிரட் துரையப்பா யாழ் மேயராகின்றார்)
இதன் பின்னர் த்மிழரின் தேசியச் சின்னமாகௌருவெடுத்த நூலகம் 1981 இல் சிறீலங்கா அரச ஆதரவோடு எரிக்கப் படுகிறது .இதன் பின்னர் இலங்கையின் தேசிய அரசியல் அரங்கிலும் இனமுரண்பாட்டிலும் அது பிரதான பாத்திரமாக மாறுகிறது. இப்போது வரையும் தேசிய அரசியலில் அது பிரதான பங்கு வகிப்பதாகவே உள்ளது
இரண்டு பிரதான தேசியக்கட்சிகளின் அரசியலிலும் அதேநேரம் போராட்ட அரசியலிலும் நூலகம் முக்கிய பாத்திரமாகிறது.
மூன்றாவதாக அது சர்வதேச அரசியல் அந்தஸ்து பெற்ற ஒன்றாகவும் உள்ளது.இன்று சர்வதேச சமூகத்தின் பார்வைகுட்பட்டதாக அது உள்ளது.

சமூகவியல் நோக்கில் நூலகம் :
யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி முக்கியத்துவம் காரணமாக கல்வியோடு தொடர்புடைய நூலகம் மக்கள் மத்தியில் முகியத்துவம் மிகுந்ததாகவுள்ளது.யாழ்ப்பாணச்சமூகக் கட்டமைபில் சிறப்பியல்புகளில் ஒன்று சனசமூக நிலயங்கள்.ஒவோரு ஊரிலும் இருகின்ற சனசமூக நிலயங்களுக்கெல்லம் மையப் புள்ளியாக யாழ்நூலகம் உருமாறுகிறது.சனசமூக நிலயங்களுக்கும் மக்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பிருந்தது.மக்கள் ஒன்றுகூடி கருத்துக்களை பரிமாறுவதற்கான தளமாக அது இருந்தது.பின்னாளில் போராளிகளுக்கான தொடர்பு மையமகவும் மாறியது இந்தப் பின்னணியில் நேரடியாக யாழ் நூலகத்தோடு தொடர்பு பட்டிருக்காத பலரும் சமூகப் பாரம்பரியத்தின் ஊடாக தொடர்பு பெற்றிருந்தனர்.

ஆக,
அழகான கட்டடமாகவும் மிக நெருக்கமான தொடர்பு பட்டதாகவும் துருத்திகொண்டு தெரியும் யாழ் நூலகம் தமிழரை பழி தீர்பதற்கு சரியா தெரிவாக இருந்திருகிறது.இதனப் போலவே எவ்வாறு தமிழரைப் பழிதீர்பதற்கு இந்த நூலகம் பயன் படுத்தப்பட்டதோ அதே போல் தமிழரை தன்வசப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இதனை மையப் படுத்திய தமிழரின் உளவியல் சமூகவியல் யதர்த்தமும் அதேபோல் அரச உளவியலும் இந்த படத்தில் ஆரயப் படுகிறன.

கடந்த 25 வருடகால இனப்படுகொலைப் போரியலில் நூலகம் பங்களித்து நிற்கிறது.போராளிகளின் வாசிப்புக்கும் பின்னர் கோட்டைக்கெதிரான சண்டையில் போராளிகளின் அரணாகவும் நூலகம் பயன்பெற்றிருக்கிறது.

தொடர்புக்கு: someeth13@gmail.com

Saturday, May 19, 2007

நகுலன்...காலமானார்.

17.05.2007 அன்று மிக அமைதியான வாழ்வியலின் ஒரு நாடகக்காரனாக வாழ்ந்த நகுலன் என்கிற எழுத்து ஆழுமை நிரந்தர அமைதிக்குப் போய்விட்டது. இன்று(19.05.2007) அவரின் இறுதி நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.




இருபதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்.

-நகுலன்.


நவீன தமிழ் இலக்கியத்தின் அற்புதமான படைப்பளி.அவர் எப்போதும் எந்த குழுக்களுக்குள்ளும் சிக்கிகொள்ளாத ஒரு நீடித்த தனிமையில் இருந்தார்.இறக்கும் போது அந்த தனிமை அவரை யாரும் நெருங்க முடியாத துரத்திற்க்கு கொண்டு போனது.

நகுலன் என்கிற டி.கே.துரைசாமி பிரந்தது தமிழ் நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் வளர்ந்தது இறுதிவரை வாழ்ந்தது எல்லாமே கேரளத்தின் திருவானந்தபுரத்தில்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராச்சிப் பட்டமும் பெற்றவர்.திருவானந்த புரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேரசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நாவலாசிரியர் ,சிறுகதை எழுத்தாளர்.கவிஞர்,விமர்சகர்,ஆராச்சியாளர் என்கிற பல பரிணாமங்களைக் கொண்டாலும் எந்த இத்தியாதிக் இலக்கியக் குழுகளிலும் சிக்காதவர் நகுலன்.

காமம், மரபு,பிரம்மச்சர்யம்,காமம்,தனிமை,தர்க்கம் என் நீளும் நகுலனின் எழுதுலகம் அலாதியானது. ஏழ்மையும் ,தனிமையும் அவருடன் எப்போதும் கூட இருந்தன.

நகுலன் கவிதைகளை மீண்டுமொருமுறை படித படியே அவர் எழுதாலேயே அவரை அஞ்சலிப்போம்.தன் மரணம் குறித்து அவர் நீறையவே எழுதியிருகிறார்.அதை நோக்கி அவர் காத்திருந்தார்.




" ராத்திரியில்
ஒவ்வொரு நட்சத்திரமும்
என்னை பிரசவிக்கிறது"

-நகுலன்



"one said:
The cat has its claws
The rat has its teeth
Even the bird has its beak
What have you?
The other said:
Flash wedded to the mind
Subject to the school of suffering and
survival"

-Nakulan





( நண்பர் காஞ்சனை சீனிவாசன் அவர்களின் நகுலன் குறித்த புகைப் பட ஆவணத்தில் இருந்து எடுக்கப் பட்ட படங்கள் இவை. நகுலனின் மறைவுக்கு சில மாதங்கள் முன்னர் இந்தப் வண்ணப்படங்கள் எடுக்கப் பட்டன.கறுப்பு வெள்ளைப் படம் சில வருடங்கள் முன்னர் எடுக்கப் பட்டது)

Friday, May 18, 2007

மே 13....படுகொலையின் மற்றுமொரு நாள்.

மே 13 என்பது என் வழ்வின் அற்புதமான நாளாகத் தான் எப்போதும் இருந்திருக்க வேண்டும்.
1981 இல் மே 13 க்கு பின்னரான நாட்களில் தீட்டப் பட்ட கொடும் திட்டத்தின் படுகொலையின் செய்தியினை மே 31 நள்ளிரவில் யாழ் நூலகத்தில் கொழுந்துவிட்டெரிந்த தீ உலகிற்க்குச் சொல்லியது. 2006 அந்த படுகொலைக்கு 25 வயது.அதற்க்கு 18 தினம் முன்பாக மே 13 நள்ளிரவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் உறங்கிகொண்டிருந்த அப்பாவிகளை உயிர்பலிவாங்கின சில துப்பாக்கிகள்.

நான் மறந்தாலும் மே 13 என்னைச் சூழ உள்ளவர்களால் எப்போதும் நினைவு படுத்தப்படும் நாள்.இந்த ஆண்டு அதற்கு பல தினங்கள் முன்பதாகவே அது எனக்கு நினைவில் வலியாய் வந்தது.கடந்த வருடத்தில் யாழ்ப்பாணத்தில் அந்த மக்களின், சின்ன் சின்னப் பிள்ளைகளின் உணர்வினைக் சில நாட்கள் கூடவே இருந்து கண்டிருகிறேன்.அதனைப் பதிவு செய்திருகிறேன்.

கொலை செய்தவர்கள் குறித்த விபரம் தெரியும் என்று நீதிபதியிடம் சொன்ன சாட்சிகள் இன்றுவரை என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் இனியும் தெரியப்போவதில்லை.யார் கொலை செய்தார்கள் என்பதும் இனித்தெரியப் போவதில்லை.ஒருகிராமமே ஏதிலிகளானது........

அந்த மே 13 படுகொலையில் இறந்துபோன ஒரு வயது கூட ஆகாத சின்னப் பிஞ்சுகள் இரத்ததில் மிதந்ததைப் பார்த்த இளம் குழந்தைகளின் உணர்வுகளை, சென்ற வருடத்தில் கட்டுரையாக எழுதியிருந்தேன்.ஆங்கிலத்தில் எழுதப் பட்ட அந்த கட்டுரையை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன்.


(உங்கள் வேலைப் பளுக்களுகிடையில் இந்தக் கட்டுரையைப் படிப்பது கடினமெனில் நேரமிருக்கையில் வாசியுங்கள்)

Human rights: Fear stalks the survivors of Allaipiddy
By: S.Somitharan
Courtesy: Northeastern Monthly - July 2006

We are scared. We d not know why they kill little children. After the massacre that night we peeped through the window. Children were swimming in pools of blood. My uncle was also in the same state,? said a young girl.

Another girl added ?Those who did not see the actual scene saw pictures of the dead kids. We like to live at Allaipiddy but we are scared.?

These children (whose names like those of most others in this article are withheld for security reasons) are displaced in a Catholic church in Jaffna town after the massacre at Allaipiddy in Kayts on 13 May. Like this child others too are bereft of their homes and cannot return.

Ironically, none but the Sri Lanka navy and the EPDP cadres in Allaipiddy are willing to give protection to the civilians. Let alone being reluctant to accept security guarantees from the navy and EPDP, the civilians are also apprehensive of residing near camps in fear such places might be attacked by the Tigers.

The people of Allaipiddy returned to the village they abandoned in 1990 after the Ceasefire Agreement of 2002. They rebuilt their homes and businesses. Till 13 May this year they believed they could live in Allaipiddy though fighting was raging elsewhere. Today however residents feel the killings at Allaipiddy are without precedent because unlike on other instances where people of the area are arrested on suspicion after an attack on government forces, in the case of Allaipiddy, the navy deliberately targeted civilians, including children, without cause.

I am quite certain the victims had nothing to do with any subversive activity. It is precisely this reason that we feel there is no guarantee for the lives of anyone at Allaipiddy. That is why the whole village fled elsewhere for refuge,? said a displaced resident from the village.

Residents however believe that the navy was interested in acquiring the house where the family was massacred, but its owners were unwilling to part with it. This could be the punishment.

Allaipiddy, as was the case in most of the villages that are now within the 144 sq. km. high security zone (HSZ), first suffered displacement in 1990. Many of the survivors are fishing families from coastal areas such as Kankesanthurai and Keerimalai, while others are from the interior farms of Tellipalai.

The Sri Lankan security forces moved into Allaipiddy in 1990 because of a need to establish a camp to facilitate troop movement and supply lines to the Jaffna Fort, which was at that time under the control of the Sri Lanka government. The disappearances, extrajudicial executions and sheer terror perpetrated by the security forces on the civilian population at Allaipiddy forced them to vacate the village.

It is believed more than 100 persons were either killed or disappeared from that village during the military campaign of 1990. (An account of the depopulation of three villages: Mandatheevu, Allaipiddy and Mankumban are set out in a North East Secretariat for Human Rights ? NESOHR ? report published in 2005). What remained till resettlement began after the CFA was initialled were the navy and the EPDP.

Allaipiddy will remain a contentious spot because it occupies the strategically important position it does. As long as the LTTE retains its base at Pooneryan, the navy needs Allaipiddy to control LTTE sea movements between its base and the government facilities at Kankensanthurai. It will also be of some importance as a supply line for troops in Jaffna.

Rev Fr. Amalraj a Catholic priest attached to the parish at Allaipiddy rescued some injured people from certain death by taking them to hospital on the night of 13 May. The navy tried its best to prevent him in fear the survivors would later identify the killers. Through his prompt and humane action three persons survived and are now witnesses ? two old people and a child. It is believed that the woman took a glancing shot and fell down and the killers had left her for dead. The man was severely injured and was admitted to hospital, but lived to tell the tale. The child was hiding behind a door and saw all what happened.

Returning to Allaipiddy is almost impossible. There is no security for Tamil civilians. However, there is no difference between Allaipiddy and the rest of Jaffna. When I ride a motorbike even in Jaffna town I feel the small of my back tingling in fear of straying into the crossfire,? said Amalraj.

Many people in Jaffna think similarly. Rather than the day-to-day killings that are the order of the day at present, the period when there was total war was better they feel. After four years of the CFA, terror has suddenly re-emerged with disappearances and murder that make the residents feel very vulnerable.

According to the Human Rights Commission (Jaffna) 153 disappearances have been reported recently. But it is well known that those whose names are reported form only a fraction of those whose rights have been violated in some way. Due to the multiplicity of possible perpetrators, the public is scared to complain to the authorities. Second, it is mostly the educated and the city dweller that has access to the HRC not those in the outlying villages who have to cross checkpoints manned by the military to reach Jaffna. Young people do not complain nor do families with young people ? the high risk category.

Human rights activists feel that people living in groups are harassed more than others because if the military enters a place with a large group of people, they abuse more people. This could be because the demonstration effect of such abuse could have greater impact than in the case of few individuals. It could also be because nobody takes ultimate responsibility in an IDP camp and the security forces can behave with impunity.

An example of what happened recently is illustrative. When a claymore blast occurred near a welfare centre, soldiers entered the centre on suspicion the perpetrators could have run inside. When they could not find them they turned violent hands on the young males within the camp. Then they told the males and the older folk to leave the makeshift huts while the girls were kept inside. The soldiers and the girls remained together for around half an hour.

The victims are unwilling to speak because they might be victimised again. They are scared to report to the HRC either,? said an NGO worker laconically.

Another reason the public is scared to complain is because the perpetrators of violence are not easily identifiable. It could be the military, the paramilitaries or the Tigers. The confusion and the culpability of all parties in some way or another have given rise to distrust towards all of them.

A woman having love affair with EPDP cadre is killed, as much as the man who gives meals to the LTTE. The Jaffna public was trained to protect themselves when there was full-scale war, including air raids, but today, since individuals are the target there is no escape,? the NGO worker said.

The only option is to run away from Jaffna, but it will be better to go overseas,? said a resident.

It was when the Jaffna public was under such stress that the bodies were discovered at Kopay. The body of a Hindu priest was exhumed and identified. He had no political connections. The body of a youth was also discovered there, wearing a watch that was eerily still ticking. He too was identified but there was report about him with the HRC. Nobody had complained to the HRC he was missing because he had gone to his grandmother?s home and was not missed anywhere till the fateful news arrived of his corpse.

What is more, though there are details of killing people look at it as news and sensation. It has not acted as a preventive of further killing. Therefore, the acts of violence continue unabated. This is partly because the law enforcement machinery is impaired, but not entirely.

Civil society has lost its voice and the state acts as if it has no obligation towards one as a citizen. So even public opinion carries no weight,? said the NGO worker.

An existence wrapped with fear is beginning to tell on people?s minds. Psychological disturbance is not only telling on them in the way they handle conflict-related issues but also in other matters that they confront in their day-to-day lives. Amongst the groups vulnerable are children.

The next generation is badly affected because they see pictures in the media as well as in real life, which leaves them scarred,? said Dr. S. Sivayogam a psychiatrist at the Jaffna Teaching Hospital.

The public believes that anyone can kill anyone else and get away with it. It creates a great sense of vulnerability and futility, which is affecting their emotional well being.

Civilians do not carry arms. But in today?s war it is they who are worst affected. It is the government and LTTE that should guarantee civilian protection and how well they do it will play an important role in defining the politics of the future.

Sunday, April 08, 2007

வரவனையான்- சோமி - சயந்தன், ஒரு பரபர உரையாடல்

சயந்தனின் பதிவில் இருந்து முழுமையாக எடுக்கப் பட்டு எனது பதிவில் பிரசுரிக்கப் படுகிறது.
தொடர்ந்து எங்கள் ஒலிப்பதிவுகளை வலையுலகில் ஏற்றிவரும் அண்ணன் "மொக்கை ஒலி" சயந்தன் மாஸ்டருக்கு
நன்றி

வலைப் பதிவுலகில் பின்னூட்டமிடும் வசதியென்பது வேறெந்த ஊடகத்திற்கும் கிடைத்திராத பெரும் வாய்ப்புக்களில் ஒன்று. பதிவாளர் முடித்த பதிவு, அதனை வாசிப்பவரிடத்தில் ஆரம்பிக்கும் அவரது சிந்தனையின் தொடர்ச்சியை, தொடர்ந்தும் இறுதி வரை கொண்டு செல்ல உதவும் பின்னூட்ட வசதிகள் சரியான முறையில் தமிழ் வலைப்பதிவுச் சூழலில் பயன்படுத்தப் படுகிறதா..?

பெரும்பாலும் பாராட்டுக்களாகவும் வாழ்த்துக்களாகவும் அல்லது வசைவுகளாகவும் அமைகின்ற பின்னூட்டங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகின்றது..?

ஒருவருடைய எண்ணப் பதிவுகளை வெளியிட, இன்னுமொருவருடைய அனுமதியை வேண்டி நிற்கும் ஊடகச் சூழலில், பெரும் கட்டுடைப்பாக அவரவர்கள் தமது மனப்பதிவுகளை சுதந்திரமாகவும், திறந்த நிலையிலும் வெளியிடும் வாய்ப்பினை வலைப் பதிவு தந்திருக்கிறது. இந்நிலையில் எழுதப் படும் பதிவுகள் ஒருவருடைய மன வெளிப்பாட்டின் பதிவுகளாக அமைவது தவிர்க்க முடியாததாகிற போது, அவை கண்டிப்பாக ஏதாவது மாற்றத்திற்கான, அல்லது வாசகரை ஏதோவொரு விதத்தில் ஒழுங்கமைக்கும் படியாக அமைவது கடைப் பிடிக்கப் படக் கூடியதா..?

இவைபற்றிய கலைந்துரையாடல் இது.




Saturday, April 07, 2007

முன்னோட்ட முகப்பு ;ஒரு பரபர உரையாடல்....

எந்தவித முன்னேற்பாடுமற்ற கதைகளின் குவியல் இது...............

பல வட்டார வழக்கியல் தமிழ்கள்.........

வரவனியானின் பின்னூட்ட அரசியல் மீதான கட்டுடைப்பு.......

சயந்தனின் சைற் அடித்தல்கள்.....

சோமியின் சொதப்பல்கள்.............

இப்படி இன்னும் பல ...காத்திருங்கள் விரைவில் உங்கள் தமிழ்மணத்தில்.....

ஒரு நள்ளிரவுபொழுதில் சயந்தனும் பின்னிரவில் அல்லது அதிகாலையில் நானும் வரவனையானும் மும்முனையில் நடத்திய மொக்கைக் கதைகளின் தொகுப்பு விரைவில் உங்கள் தமிழ்மணத்தில் வருகிறது.

Monday, February 26, 2007

World Record......சிறிலங்கா

இலங்கை இந்தியாவுக்கு பக்கதில இருந்தாலும் 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியா சாதிக்காத சாதனையை இலங்கை சாதித்திருகிறது.எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன்

Oggetto: World Record......



Mahinda Chinthana has kept a world record in having the largest cabinet.
The below is a comparison between the cabinets of some countries and that of Sri Lanka.


Canada - 31 ministers for 37 million people
India - 20 ministers for 1000 million people
Russia - 25 ministers for 150 million people
Malaysia - 23 ministers for 25 million people
Bangladesh - 22 ministers for 150 million people
America - 15 ministers for 274 million people
Pakistan - 13 ministers for 130 million people
Sri Lanka - 108 ministers for 19 million people

Monthly salary of a cabinet minister ? Rs. 65,000
Monthly salary of a non cabinet minister ? Rs.63,500
The incentive for participating for a parliamentary session ? Rs.500
The incentive for participating for a select committee? Rs.200
Monthly fuel incentive for a cabinet and a non cabinet minister ? Rs. 75,000
Monthly fuel incentive deputy minister - Rs.50,000
Monthly incentive for the personal telephone ? Rs.20,000
Monthly mobile incentive ? Rs. 10,000
The facility is provided to take an unlimited amount of IDD and local calls from the official telephone for a month.

Every minister has a right to employ 4 secretaries as media, personal,
coordinating, and public relations. Vehicles, fuel incentives, telephone
incentives and limited entertainment incentives are provided for all of
them from the ministry.

For the 18 cabinet and non cabinet ministers, the monthly expense for fuel
From the government is Rs:1,350,000. Also for the 10 new deputy ministers,
Rs:500,000 should be separated. The total monthly fuel expense for them is
Rs:1,850,000.

Oh.... what a blessed Nation.....

Friday, February 23, 2007

கடைசிக் கடிதம்..........

பிரியத்துகுரிய என் செல்பேசியே,

இப்போது நீ யாரோ ஒருவரின் வாய்க்கும் காதுக்கும் இடையில் சிக்குப் பட்டிருக்கலாம்.

எவனோ ஒருவன் சொல்லும் ஆபாச ஜோக்கை இன்னொருவனுக்கு கடத்திகொண்டிருகலாம்.

ஒரு இனிய காதலர்களின் மொழி உன்னூடே பகிரப் பட்டுக்கொண்டிருக்கலாம்.

கலைஞர்,திராவிடம் ,செயலலிதா பற்றிய அரசியல் பேச்சுக்கள் நடக்கலாம்.

யாரவது ஆன்மிக அருளுரை நிகழ்த்திக் கொண்டிருக்காலாம் ஒரு பக்த்தன் உன் வழியே அதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

ஒருவனை கொல்லும் சதித் திட்டம் உன் ஊடே நிகழ்த்தப் படலாம்.
இப்படி இப்படி இன்னும்...

சாரு நிவேதிதா கற்பனை செய்தது போல் நானும் கற்பனை செய்து பார்த்தேன்...வேண்டாம்....
இதற்கு மேல் என்னால் கற்பனை செய்வது இலகுவானதாயில்லை.இன்னும் வலிக்கிறது
உனக்கு சாருவையும் தெரியும் போனவாரம் தனது கவிதைப் புத்தகம் தந்து விட்டுப் போன சேகரையும் தெரியும்.கடந்த மூன்று வருடத்தில் எனக்கு தெரிந்த அத்தனை பேரையும்தெரிந்தவள் நீ.
உனக்கு தெரியாமல் நான் சல்லாபித்ததுகூட இல்லை.நான் உறங்கும் போதும் என் கூடவே அருகில் விழித்திருந்து அதிகாலையில் நேரம் சொல்லி எழுப்பியவள் நீ.நடு இரவிலும் என்னை உலகத்தோடு இணைத்தவள். நான் ஒரு பத்திரிகைக்காரன் என்பதை நள்ளிரவில் தட்டியெழுப்பி சேதி சொல்லிப் புரிய வைத்தவள்.உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த அரசியல் இரகசியங்கள் எத்தனை(என் காதல் அரசியல் வரைக்கும்).எத்தனை முக்கியத்துவம் மிக்க தொலைபேசி இலக்கங்களை உன்னுள் தேக்கி வைத்திருந்தாய்.

என் தோழிகளுக்கும் எனக்குமான ஊடாட்டத்தை முற்றிலும் அறிந்தவள் நீ.அன்று அவள் பேசிய வார்த்தைகளில் நொந்து போயிருந்த எனக்கு நீடித்த தனிமையில் இருந்த ஒரே ஆறுதல் நீதானே.என் தோழியின் பல குறுஞ்சேதிகளைத் தேக்கிவைத்து நினைவுகளில் என்னை தினம் தினம் மகிழ்ச்சிப் படுத்தியவன் நீ. இன்றைக்கு எல்லாவற்றையும் உன்னுள் வைத்து கொண்டு என்னைப் பிரிந்து போனாயோ.

என் தோழி என்னைப் பிரிந்த பொழுதுகளிலான அதே வேதனையே இப்போதும் என்னுள்.
விடிய விடிய உன்னில் பேசியிருகிறேன்.அந்த பொழுதுகளில் என் தோழியின் துக்கத்தையும் வேதனையையும் நீ தூங்காது விழித்திருந்து உள்வாங்கினாய்
என் துயரம் சந்தோசம்.அழுகை,வன்முறை,அறிவு ,உணர்வு எல்லாமும் தெரிந்த ஒருத்தி நீ மட்டும்தான்.

நீ பிரிந்து போன போதுதான் எனக்கு தெரிந்தது எனக்கும் உனக்கும் இத்தனை உறவிருந்ததென்று. ஒரு நாள் முழுவதும் சாப்பிடவே பிடிக்கவில்லை அழுகை அழுகையாக வந்தது.ஒரு செல்போன் போனதுக்கு ஏன் இவ்வளோ அதுவும் பழைய போன், வித்தாலும் 1000 ரூபா தேறாது என்று என் நண்பன் சொன்னான் அவனுக்கு தெரியாது உனக்கும் எனக்குமான உறவு
புதிய போன் வாங்க வேண்டிய தருணங்களிலெல்லாம் உன்னை என்னில் இருந்து பிரிக்கமுடியாமல் உன் கூடவே இருந்தேனே உனக்கு மட்டும் எப்படி மனசு வந்தது என்னைப் பிரிந்து செல்ல.

அந்த திங்கள் பின் காலைப் பொழுது வரை தூங்கி கண் விழித்த போது என்னில் நீ பிரிந்திருந்தாய்.நான் உன்னைப் பிரிந்து தூங்கியதில்லையே.என் நண்பன் உன்னைப் பிரித்து மேசையில் தனித்து வைத்த கோபத்தில் என்னை விட்டுப் போனாயோ இல்லை அப்படிச் செய்வதற்க்கு நீ சாதாரண மனுசி இல்லையே. இல்லை உன்னை யரோ பலாத்காரமாக திருடிச் சென்றிருக்கிறார்கள்.அவர்களோடு நீ முரண்டு பிடித்திருப்பாய்.அவர்கள் யாரிடமாவது இப்போது உன்னை விற்றிருக்க கூடும்.

உன்னை போலவே என் கூட இருந்த ஒரு டிஜிற்றல் கமரா என்னை விட்டுப் போனதன் பின் வந்தவள் நீ.உனக்கு அது பற்றிய நிறையக் கதைகள் சொல்லியிருகிறேன்.நண்பன் செந்தூரன் விருபிய கமெரா அது.அவன் அகாலமாக இறந்து சில நாட்களில் அதுவும் அகாலமாக என்னை விட்டுப்போனது. எனக்கு தொடர்ந்து வலியைத் தந்த அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் பிறகு உன்னில் ஒன்றித்தேன்.மனிதர்களைவிடவும் உன்னை நான் நேசித்தேன்.நான் விரும்பியும் இருக்கமுடியாமல் தவிக்கிற நானாக இருத்தலில் நீ நீயாக இருந்தாய்.நானும் உன்னில் மட்டும்தான் அதிகம் நானாக இருந்தேன்.என் கோபத்தில் எத்தனை தடவை நீ அடிபட்டிருப்பாய்? உன்னை நான் தூக்கியெறிந்த பொழுதுகள் எத்தனை. உன்னை இந்தனை கொடுமைப் படுத்திய போதும் எனக்காக எப்படி உன்னல் இயங்க முடிந்தது என்று நானே ஆச்சரியப் பட்டேன்.

இதற்கு மேல் எழுத முடியவில்லை. இபோது தவிர்க்கமுடியாமல் புதியவள் ஒருத்தி வந்திருக்கிறாள்.அவள் உன்னை விட பெறுமதியானவளாம்.அழகானவளாம்.என்னைப் படமெடுகிறள்.பாட்டுப்பாடுகிறாள்,நியும் பாடக் கூடியவள்தான் ஆனால் நான் உன்னில் பாட்டை ரசித்ததில்லை.என் குரலைப் பதிவு செய்கிறாள்.இன்னும் நிறைய சாகாசங்கள் செய்கிறாள். ஆனால்,என்னால் இன்னும் அவளோடு இணைய முடியவில்லை. நீ கூட இருந்த போது இருந்த உணர்வு இல்லை.

அடுத்த முறை சிலவேளை உனக்கு நான் மடல் எழுதலாம் அப்போது அவள் என்னில் நெருங்கியிருக்கலாம்.இதுதானே மனித இயல்பு.உன்னைப் பற்றிய வலி நிறைந்த உணர்வுகளை சுமந்த படியே இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளுவது எனக்கு அவசியமாகிறது.கால ஓட்டத்தில் நீயும் கூட என்னை மறந்து விடுவாய்.என்னுடன் புதியவள் அப்போது மிக நெருகமானவளாக இருக்கலாம். நினைவுகள் மட்டுமே அப்போது நம்மிடம் மீதமாக இருக்கும்.

என் பிரிய செல்போனே நான் உன்னில் இருந்து விடை பெற்றுக் கொள்ளுகிறேன்.
பிரியமுடன்
உன் தோழன்
சோமி.


குறிப்பு: அன்பு நண்பர்களே என் செல்போன் எனது வீட்டில் வைத்தே திருட்டுப் போன காரணத்தால் உங்கள் அனைவரினதும் தொலைபேசி, செல்லிடபேசி இலக்கங்கள் தொலைந்துவிட்டன தயவு செய்து போன் பண்ணூகள் இல்லையெனில் மிஸ்டுகால் கொடுங்கள் நான் போன் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளுகிறேன்.இல்லையெனில் குறுஞ்செய்தி அனுப்புங்கள்.எனது பழைய இலக்கமே தொடர்ந்தும் பாவனையில் உள்ளது.(0091 9940 390 479)

Friday, February 16, 2007

தமிழாலயம்.........

தமிழாலயம். இந்த பெயர் கொழும்பு இளவட்டங்களுக்கு நிறையப் பரிட்சயமானது.சாதிய,வர்க்க,கருத்தியல்,காதலியல்,வேதியல்,விளங்காதவியல்,தேசியம்,பண்பாடு,
கலாச்சாரம் உள்ளிட்ட இன்ன பிற விடயங்களில் ஆர்வமுள்ள இளந்தலைமுறையினரை ஒன்றிணைத்த இடம்.உயர்தரப் பரீட்சை எடுத்துப் போட்டு சும்மா இருக்கிற காலத்தில பயனுள்ள வேலையளச் செய்யுறதுக்கு ஆசைப் படுகிற கூட்டத்துக்கான இடம்

நான் கொழும்பு வந்த புதிதில் அடக்கமுடியாத என் ஆர்வத்தில் சேர்ந்து கொண்ட அமைப்பிது.நண்பர் ஏ.ஆர்.திருச்செந்தூரன்(இவர் இப்ப பெரிய வானொலி அறிவிப்பாளர்)எனக்கு தெரிந்த ஒரே கொழும்பு நணபர்.சோமி எங்கள மாதிரி ஆர்வமுள்ள இளஞர்களுக்காக உருவான தமிழாலயம் எண்ட அமைப்பில உங்களைச் சேர்த்து விடுறன் எண்டு அழைத்துப் போனார்.

நான் அவ்வப் போது உயர்தர வகுப்புகளுக்கு செல்லும்(எந்த காலத்தில வகுப்புக்கு ஒழுங்கா போயிருக்கம்) கொழும்பு தமிழ்ச்சங்க கட்டடத்தில் நடந்த தமிழாலயக் கூட்டத்திற்குச் சென்றேன்.ஆக கொழும்பு பெட்டையளோட சேர்ந்து நாடகம் போட ஒரு அரிய வாய்ப்பு எண்ட புழுகம் ஒரு புறம் என்னை உசுப்பேற்றியது.அநியாயத்துக்கு காலுக்குச் சப்பாத்து வேற போட்டு கொண்டு தமிழ்ச்சங்கம் வந்து சேர்ந்தேன்.

5 மணிக்கு கூட்டமென்றார்கள். எப்போதுமில்லாத அதிசயமாக ஆர்வத்தில 5 மணிக்கே நான் கூட்டத்துக்கு போனே 5.40 க்கு ஒரு நாலு பேர் வந்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.6 மணிக்கு இன்னும் இருவர் வந்து சேர்ந்தனர். என்னை அறிமுகப் படுத்த வேண்டிய திருச்செந்தூரன் 6.10 கு வந்து சேர்ந்தான். ம் 6.15 க்கு வந்து சேர்ந்த மூவரில் ஒருவர்தான் அன்றைய கூட்டத்துக்கு தலமையாம். சரியெனகூட்டம் ஆரம்பமாகியது.

இவர்தான் சோமிதரன், பிறந்தது யாழ்ப்பாணதில. யாழ்ப்பாணத்தில எங்கெயெடா? ஒருவன் கேட்டன். கேட்டவன் பெயர் சேயோன் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உயர் தரம் படித்தவன். 'பருத்தித்துறை" என்றேன் இவனும் பருத்திதுறைதான் என்றான் சேயோன்.அந்த பருத்தித்துறைப் பையன் பெயர் இ.செந்தூரன்.பிறகு கதைக்கலாம் என்று பேச முற்பட்ட செந்துரனை தடுத்தவன் பெயர் ராகுலன்.

இவர் மட்டக்களப்பில படிச்சவர்.நாடகம் போடுவார் என்னைப்போல என்று திருச்செந்துரன் சொல்ல என்னை உற்றுப் பார்த்தவன் பெயர் சயந்தன்(இதுதான் எனக்கும் சயந்தனுக்குமான முதல் பார்வை ஹி..ஹி...) இவர் சிறுகதையாசிரியர் சயந்தன் என்றார்கள்.சோமிதரனை அகில இலங்கை தமிழ்மொழித்தின விவாத போட்டியில் சந்திதோம். உமாசுதன் ,ரஜீவ் நிர்மலசிங்கம் இவர்கள் இருவரும் நான் ஏற்கனவே விவாதத்தில் சந்தித்தவர்கள். திருச்செந்தூரனின் விவாத சகபாடிகள் இவர்களும் தமிழாலயத்தில் இருந்தார்கள்.

பி.எஸ்.செந்தூரன் ரோயல் கல்லூரி மாணவன். கூட்டம் முழுவதிலும் சயந்தனுக்கு பெரும் சவாலாக இருந்தவன்(தமிழாலயம் அடுத்த பாகத்தில இது பற்றிய பல சுவாரஸ்யங்கள் சொல்லுறன்).இவர்களைத்தவிர பிரவினும் அந்த கூட்டத்தில் இருந்திருக்க வேணும் மற்றவர்கள் யாரென்பது மறந்து விட்டது. தமிழாலயத்தின் முதலும் கடசியுமான சஞ்சிகை உயிர்ப்பு.அதில அன்றைய தமிழாலயம் உறுப்பினர்கள் ஒரு 30 பேருக்கும் மேல பெயர் வெளிடிட்டிருந்தார்கள் அதை விரைவில் வெளியிடுறன்.உயிர்ப்பு பற்றியும் தனி பதிவு போடுறன்.எனது முதலும் முடிவுமான கவிதையை வெளியிட்ட சஞ்சிகை அது.சயந்தன்தான் அதற்கு ஆசிரியர்.

சரியென என் நாடகம் ஒன்று தமிழலயத்தின் தைப் பொங்கல் விழாவில போடுவதாக முடிவானது.25 பேர் கோண்ட நாடகமாக தொடங்கின் கடசியில் ஓரங்க நாடகம் போடும் நிலைக்குக்கு நான் தள்ளப் பட்ட சோகம்.(அதுவும் தனிப் பதிவா போட வேண்டியதுதான்).கிட்டத்தட்ட 2 வருடங்கள் நான் தமிழாலயத்தில் இணந்திருந்தேன். 4 உயிர்ப்பு இதழ்கள் வெளிவந்தன. ஒன்றைத் தவிர மற்றய மூன்று இதழ்களின் ஆசிரியர் பீடங்களும் சயந்தனின் ஆழுகைக்குள் இருந்தது.

பொங்குதமிழ் எழுச்சி நடந்த போது மேத்தா,அப்துல் ரகுமான் ,வைரமுத்து கவிதைகளை வாசித்த படி பொங்கியது தமிழாலயம்மும்.சும்மா சொல்லக் கூடாது பெடியள் எல்லாருக்கும் ஓவரான தமிழ் உணர்ச்சிதான். அடுத்த பொங்கலுக்கு இரட்மலானை இந்துக் கல்லூரியில மாணாவர்களுக்கு பரிசுகளோடு சென்ற தமிழாலயம் படை ஏழைச் சிறுவர்களுக்கு உதவிகளைச் செய்தது.அடுத்து நிதி சேகரிப்புக்காக நடத்தப் பட்ட கலைச்சாரல் விழா அந்த நாளில் வெள்ளவத்தை இளசுகளை அமர்க்களப் படுத்தியவொன்று உயர்தர வகுப்பு வாத்தி மாரைக் கூப்பிட்டு விவாதம் புரிய வச்சதில எக்கச்சக்க கலக்சன்.(தமிழ் நாட்டில செலிபிரேட்டியா சினிமாக்காரர ககூப்பிடுறதைப் போல.உங்களுக்குத் தெரியாது உயர்தர வகுப்புக்காலத்தில வாத்திமார்தான் எங்களுக்கு ஹீரோக்கள்.அவையளப் பற்றிக் கிசுகிசுவும் வரும்) கலைச்சாரலில சேர்த்த காசு இப்பவும் அன்றைய பொருளாளரும் சயந்தனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான ஒருவரிடம் இன்னும் பாதுகாப்பாக உள்ளது.

இப்பிடியாக 2000ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எடுத்த மானவர்களிடமிருந்த தமிழாலயம் அதன் பின்னர் அடுத்த உயர்தர வகுப்பு தேர்வெளுதிவிட்டு சும்மா இருப்பவர்களிடம் கொடுக்கப் பட்டது. அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கோ ஏன் ஒரூகாலத்தில் தமிழாலயத்தில் கோலோச்சிய சயந்தனுக்கோ தெரியாது.

சரி இவளவு சொன்னன் நான் மினகெட்டு போனதுக்கு அந்த கூட்டத்தில ஒரு பொம்பிளப் பிள்ளையாவது இருந்ததோவெண்டு சொல்லையில்லையே எண்டு நீங்கள் கேட்கிறது விளங்குது.அட அநியாயத்திலும் அநியாயம் பெண்களை உள்ளெ சேர்ப்பதில்லை என்று தமிழாலயத்தில் முடிவே எடுத்திருக்கிறார்களாம்.காரணம் இளஞர்கள் தமிழாலயத்தில நடக்கும் உறுப்பினர் கூட்டத்தை சரியாக கவனிக்க மாட்டார்களாம்.

பின்னர் சில மாதங்களில் சயந்தன், பி.எஸ் செந்தூரன் ஆகியோரின் பெரும் முயற்சி மற்றும் போராட்டத்தின் பயனாய் பெண்களுக்கு தமிழாலயத்தில் இடஒதுக்டு கிடைத்தது.(இதுக்குப் பிறக்கு குட்டங்அகளுக்கு கணிசமானவர்கள் வந்தனர்.இ.செந்தூரன் பெண்கள் வருகையினால் இளஞர்கள் திசை மாறுவார்கள் என்று கூறி வெளிநடப்புச் செய்தார்) அனைவரும் எதிர்பார்த்தது போலவே வந்து சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவர் நிரந்தரப் பொருளாளர்.இன்னொருவர் ஆசிரியர் பீட உறுப்பினர்.அடுத்தவர் செயலாளரோ இல்லை வேறு ஏதோ ஒரு பெரிய பதவி.(இதுவும் சயந்தன்,பி.எஸ் ஆகியோரின் முயற்சி எண்டு நீங்கள் நினைத்தால் ஆம் என்று சொல்ல முடியாது.என்ன இருந்தாலும் உள் விவகாரங்களை வெளியில் சொல்லி கட்டுப்பாட்டை மீறுவது நாகரிகமல்ல).

இப்பிடியாக இருந்த தமிழாலயத்தில் எனக்கு தெரிந்து கொழும்பு பாடசாலைகளில் பயின்ற பெரும்பாலான விவாதக்காரர்கள் இணைந்திருந்தனர்.தமிழாலயத்துக்கும் ஒரு விவாத அணி இருந்தது. நான் அணியில் ஒருவன். தொடர்ந்து அணியில் இருந்த நான் ஒரு விவாத அரங்கில் பெண்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்ற நிர்பந்ததில் எனது இடத்தை வழங்க வேண்டியதாகப் போனது.அதன் பின்னர் நான் வேலையில் பிசியாகியதில் மீண்டும் அந்த இடத்தை பிடிக்க முடியாது போனது.பெண்கள் இட உதுக்கீட்டுக்காக ப்ரும் போராட்டம் நடந்ததால் பலர் தாமது இடங்களைத் தியாகம் செய்தனர்.

இப்படிப்பட்ட தமிழாலயத்தை சொன்ன நான் ஒருவர் பெயரை சொல்லாமலேயே வந்து விட்டேன்
அவர்தான் க.க.உதயக்குமார் ஆசிரியர்.எங்கள் தலைவர் அவர்.அவரை ரேடியோவில் அறிவுப்பு செய்யுமாபோல அறிவுப்பு செய்துகொண்டிருந்த ஏ.ஆர்.திருச்செந்தூரன் காகா உதயக்குமார் எண்டு அறிவுப்பு செய்தது முக்கிய வரலாற்று நிகழ்வு.

அடுத்த தமிழாலயம் தொடரில் பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன .இதுவரை எழுதியது தமிழாலயம் பற்றிய உற்சாக அறிமுகம் மட்டுமே.

கொழும்பில் என் முதல் அறை நண்பர்கள்..

நவம்பர் 27, 2000 . எனக்கு பரிட்சையமில்லத கொழும்புக்கு இடம்பெயர்ந்தேன்.இலங்கையைப் பொறுத்தளவில் இது எல்லோருக்குமே முக்கியமானதும் பதற்றமானதுமான நாள்.தெகிவளையில் ஒரு சிங்கள வீட்டில் அம்மா என்னை விட்டுச் சென்ற போது எனக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை. எனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் என்னுடன் சேர்த்து மொத்தம் 6 பேர்.அந்த அறை வீட்டின் மையப் பகுதியில் இருந்தது.பக்கத்து அறையில் வீட்டு ஓனர் அன்ரியின் மகள் படித்து கொண்டிருப்பது கேட்டது.குரலை வைத்து அவளின் முகத்தை கற்பனை செய்துகொண்டேன்.அன்ரி அருமையாகப் பேசினார்.எனக்கு பிடித்திருந்தது.அறைக்குள் வந்தவுடன் என்னை அறிமுகப் படுத்தினேன். 

“அன்ரியோட இவ்வளவு நேரமாக கதைத்தீர்” என்ற அவர்கள் கேள்விக்கு,"அன்ரி நல்லவா போல இருக்கு" என்று பதில் சொன்னேன். "புதுத் தும்புத்தடி நல்லா கூட்டும்" சட்டென பதில் அவர்களிடமிருந்து வந்தது. அந்த பதிலைச் சொன்னது அமுதன்.பொறியியல் மாணவன் பகுதி நேரத் தொழிலாகப் படிப்பதாகவும் ஊர்சுற்றுவது முழு நேர தொழிலெனவும் சொன்னார்.அடுத்து வந்த நாட்களில் அதனை உறுதியும் செய்தார்.இன்னொருவர் சுரேஷ் இவர்தான் அந்த அறைக்குத் தலைவர் யாழ்ப்பாண சைவ வேளாள கட்டுமானத்தின் பிரதிபலிப்பு. சுரேஷ் கட்டிலுக்கும் மேல் சாமிப் படமிருக்கும் காலை மாலை இருவேளை பூசை செய்வார்.வெளிநாடுக்கு போவதே குறிக்கோள்.வெளிநாட்டில குடியுரிமை இருக்கும் பொம்பிளையள் கிடைத்தால் கலியாணம் செய்து கொண்டு போகலாம் எண்டதும் இவரிண்ட எண்ணம்.முப்பதைத் தாண்டிய வயதில் பிடித்த பெண் வரும் வரை போட்டோக்களையும் குறிப்புகளையும் பார்த்தபடி ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருந்தார். அடுத்தது ரஞ்சித் உசார் பேர்வழி வெளிநாட்டுக்குப் போவதே இவரதும் ஒரே இலக்கு, அதுவரை சிங்களமே தெரியாமல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வண்டி ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்.ஒவ்வொரு நாளும் தன்ர புளுகல்களை சொல்வது இரவில் இவரது வேலை. "ரஞ்சித் பறக்கவிட்டு சுடாத சும்மவே சுடு" இது அமுதன் ரஞ்சித்துக்கு கொடுக்கும் பதில்.(புளுகுறதைத்தான் பறக்கவிட்டுச் சுடுதல் என்பார்கள்)
 நானும் அமுதனும் ரஞ்சிதோடு அடிபிடி சண்டையில் இறங்கும் நண்பர்கள்.அமுதனின் ஆதரவிருந்ததால் என் உடம்பை ஒத்த ரஞ்சித்தோடு சண்டைக்கு போவதில் எனக்கு பயம் இருக்கவில்லை. இன்னொருவர் மலையகத்தைச் சேர்ந்தவர். இவரும் பறக்கவிட்டு சுடுவார். ஆனால் நல்ல ஆங்கில மற்றும் சிங்களப் புலமையும் சுறுசுறுப்பான ஆர்வம் கொண்ட இளைஞர். வீட்டுகார அன்ரியோடு நல்ல ஒட்டு.அதனால் தினம் தினம் எங்கள் அனைவரின் கிண்டலுக்கும் உள்ளானார். ஆனால் அவர் அன்ரியோடு ஒட்டாய் இருப்பதற்க்கு காரணம் எங்கள் அறையில் இருந்த யாழ்ப்பாண மேலதிக்கம். தோட்டாக்காட்டன் இங்கிலிஷ் கதைகிறதப்பார் என்கிற கிண்டல்கள் முதல் தோட்டக்காட்டன் வடக்கத்தையான் போன்ற பல கிண்டல்கள் அவனுக்கு கேட்க்கும் படியே சொல்லப்படும். அறையில் யாழ்ப்பாண நண்பர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு. ஏதும் ஆங்கிலத்தில் தெரிய வேண்டுமெண்டால் மேல் வீட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்து அங்கிளிடம் கேட்பார்களே தவிர தோட்டக்காட்டானிடம் கேட்பது சங்கை குறைவு என்பார்கள்.அவனுக்கும் எனக்கும் ஒரு உறவு இருந்தது. காரணம் நானும் அந்த அறையில் மைன்னாரிட்டிதான் என்னை மட்டக்களப்பான் என்பார்கள்.யாழ்ப்பாணதில் பிறந்திருந்தாலும் அந்த அறைக்குள் நான் மட்டக்களப்பானாகவே நுழைந்தேன்.
 இரவு நெடு நேரம் வரை மட்டக்களப்பானும் தோட்டக்காட்டானும் அன்ரியோட என்ன கதைகிறார்கள் எண்டு அறைக்குள் ஒரு குசுகுசுப்பு வரும். நான் அப்ப உயர்தரம் படித்துக் கொண்டிருந்ததால் நெடு நேரம் விழித்திருப்பன். அவனும் விழித்திருந்து படிப்பான். அவன் அப்பாவும் அம்மாவும் இன்னும் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். எப்பிடியாவது அதிக சம்பளம் வாங்கும் வேலைக்கு சேர்ந்து அவர்களை வீட்டில் உட்கார வைத்து சோறு போட வேண்டும் என்பதே அவன் கனவாக இருந்தது. பின்னாளில் சிங்களத்தில் பல வேலைகளைச் செய்வதற்க்கும் ஆங்கிலத்தில் எழுதுவதற்க்கும் ஆங்கிலத்தில் பேசிப்பழகுவதற்க்கும் எங்கள் அறை நண்பர்களுக்கு தோட்டக்காட்டன் துணை புரிந்தான்.(எங்களுக்கு இங்கிலிசுல கிரமர்தான் தெரியும் பேசுறது கஷ்டம் எண்டதாலதான் உன்னட்ட கேட்க்கிரம் என்பது அமுதம் சொல்லும் தன்னிலை விளக்கம்.) இருப்பினும் அவனுள் அரம்பம் முதலே உருவான அல்லது உருவாக்கப் பட்ட தாழ்வுமனப்பான்மை எங்களில் இருந்து சற்று தள்ளியிருந்து பேசும் நிலையினை அவனுக்குள் உருவாக்கி விட்டிருந்தது.

 இப்படியான பின்னணியோடு அந்தஅறை இருப்பினும் பொலிசுக்காரன் சோதனைக்காக வருகிறபோதும். வீட்டு அன்ரிக்கெதிராய் அணிதிரளும்போதும். ஏன் கட்டுநாயக்கா தாக்குதல் செய்தி கேட்டு துள்ளிக் குதித்த போதும் நாங்கள் அனைவரும் தமிழராக உணர்ந்தோம் என்பதை மறுப்பதற்கில்லை. பொது இடத்தில் என்னையோ அவனையோ மற்ற நால்வரும் தனியாக விட்டதில்லை. சிக்கலெதிலும் மாட்டி விட்டதுமில்லை சிக்கல் வந்தால் காப்பாற்றவும் தவறியதில்லை. 
 எமது அறையின் ஆறமவர் அமுதனின் நண்பர்(அவர் பெயரும் மறந்து விட்டது) அருமையயன காதல் கதை அவருடையது. கண்களால் மட்டும் பேசும் பல்கலைக்கழகக் காதலை வியந்து பேசுவார்.அவரும் அவரின் காதலியும் வெவ்வேறு சாதிக்காரர்.இருந்தாலும் காதலிக்கும்வரை காதலிப்போம் எண்டு காதலித்தார். அமைதியானவர் பின்னர் இவர் எமது அறையில் இருது வேறு அறைகுச் சென்று விட்டார். பின்னர் ஒருநாள் வெள்ளவத்தையில் அவரைச் சந்தித்தேன் திருமனம் முடித்துவிட்டதாகச் சொன்னார். யார் அந்த அக்காவா நான் ஆர்வமாகக் கேட்டேன். அவரிடம் ஒரு சிரிப்பு பதிலாக வந்தது அதன் பின்னர் நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை. 
 
 அறைக்கு  பின்னர் ஒருவர் வந்தர். லண்டனுக்கு போகப் போய் 6 மாதம் வெளிநாடெல்லம் சுற்றி 3 மாதம் பெல்ஜியம் சிறையில் இருந்தவர். பின்னர் இவரின் கோரிக்கை மனு அங்கிகரிக்கப்படாததால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட்டார். வந்து 1 வாரம் அவரின் அனுபவக்குவியல்களை அவிட்டுவிட்டர். 9 லட்சம் இழந்தும் சிரித்துக்கொண்டே தனது அனுபவக்கதையின் இறுதியில் ஒரு வசனம் சொன்னார் "நான் கிட்டத்தட்ட 20 விமானநிலையங்களைப் பார்த்திருப்பன், இப்ப சொல்லுறன் இன்னும் ஆறுமாதத்தில நான் லண்டனுக்கு எப்பிடியும் போவன்" இதைக் கேட்டதும் கடுப்பான அமுதன் இன்னும் உனக்கு புத்தி வரவில்லையா என்று கேட்டார்."எனக்கு எந்த நாட்டில எப்பிடி பேசோணும் எப்பிடி அசேலத்துக்கு கடிதம் கொடுக்கோணும் எண்டு தெரியும் நான் போய் காட்டுறன் பாருங்கோ'வெண்டார். அவர் சொன்ன மாதிரியே இப்போது அவர் லண்டனில இருகிறார். இப்படியான என் முதல் அறை எனக்கு குட்டித் தமிழீழம் போன்றதுவே

Sunday, February 04, 2007

வித்தியாசமான ஆடை...



2005 இல் கோவாவில் நடை பெற்ற சர்வதேச திரைப் பட விழாவில் நகைச்சுவைப் பிரஞ்சுப்(french) படமான Astrix And Obeliex - Mission Cleiopetra வில் நடித்த நடிகை படம் இது. எனது கமராவுக்குள் சிக்கிய இந்தபடத்தில் உள்ள அவரது ஆடை வித்தியாசமாக இருந்தது.


கிளியோப்பட்ராவுக்கும் சீசருக்கும் இடையிலானா ஈகோவும் அதன் பயனாக விளைந்த சவால் ஒன்றை மையப் படுத்திய கதை.நல்ல நகைச்சுவை உணர்வுடன் திரைக்கதை வடிமைக்கப் படுள்ளது. குறித்த காலத்தில் பிரமாண்டமான மாளிகையொன்றை கட்டி முடிப்பதற்க்காக கிளியோபட்டாரா முயல்கிறார்.அது நிறைவடைந்தால் சீசர் தோற்று விடுவார் அதனைத் தடுப்பதற்க்கான முயற்சியும் கட்டுவதற்க்கான முயற்சியுமே கதை.

இந்த புகைப்படத்தில் பிண்னணியில் இருப்பவர்கள் இந்தியாவுக்கான பிரஞ்சுத்தூதுவர் மற்றும் பிரஞ்சு திரைப்பட இயக்குனர்

( என்ன சோமி ஏதாவது சீரியசான விசயங்களை புளக்கில பகிர்ந்துகலாமே என்று எனது நண்பர் கேட்டிஇருந்தார்......அத்தானுங்கோ இது...ஹி..ஹி)

Saturday, February 03, 2007

சின்னம்மம்மா. . .

காலையிலிருந்தே திருச்சி மாமா வீட்டில் இருந்து பலதடவைகள் போன் வந்தாகிவிட்டது.கையில் வைத்திருக்கும் கமராவை இறக்கி வைக்க முடியாதபடி வேலை.அன்றைகென்று கமராமேன் இல்லாமல் நானே கமரா பண்ணுவதால் அதிக அழுத்தம் வேறு.சிறிது நேரத்தில் எனது உதவி இயக்குனர் செல்லிடப் பேசியையும் உறங்கு நிலமையில் வைத்து விட்டர்.
சரி ஒரு படியாக 6 மணிக்கு மேல் வேலை முடித்து அழைப்பெடுத்தால் கனடாவில் உள்ள எனது சின்னமம்மா இறந்துவிடார் என்ற செய்தி மாமாவிடமிருந்து பகிரப் பட்டது

வீட்டுக்கு வந்து மின்னஞ்சலைத் திறந்தால் கனடாவில் உள்ள எனது அக்கா இதே செய்தியை அஞ்சலிட்டிருந்தார்.இப்படித்தான் இரண்டு வருடங்கள் முன்பு எனது அம்மம்மா யாழ்ப்பாணத்தில் இறந்த போதும் எனது தங்கை குறுஞ் செய்தி அனுப்பினார்.பின்னர் தொலைபேசியில் தகவல் சொன்னார் அந்தத் தகவல் மாமாவிடம் பகிர்ந்து கொண்டேன்.எனது அம்மம்மா மாமாவுக்கு அம்மா எனபதால் அவருக்கு ஆறுதலாக சிறிது நேரம் பேச வேண்டியிருந்தது.

இதை எழுதும் இந்தக் கணத்தில் சின்னமம்மாவின் உடல் எரியூட்டப் பட்டிருக்கக் கூடும் இல்லை புதைதார்களோ தெரியவில்லை.கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கனடாவில் வசிக்கும் சின்னமம்மா பற்றி எழுதுவதற்கு நிறய இருகிறது.யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மட்டுவில் என்று ஒரு ஊர் இருக்கிறது.அதுதான் என் தாய் வழி ஊர்.அங்குதான் சின்னமம்மா பிறந்தார்.3 ஆண்களும் 5 பெண்களுமான ஒரு குடும்பத்தில் கடைசிக்கு முதல் பிள்ளை எனது சின்னமம்மா.எனது அம்மம்மா பெண்களில் மூத்தவர் மொத்தத்தில் மூன்றாவது.

மிகக் கெட்டிக்காரியான எனது அம்மம்மாவை அரை குறைப் படிப்போடு எனது தாத்தாக்கு திருமணம் முடித்து வைத்தனர்.மிக அழகான எனது அம்மம்மாவை அதிகம் வீட்டை விட்டு வெளியேறாதவாறும் அழகுபடுத்திக் கொள்ளாதவாறும் தாத்தா பார்த்துக் கொண்டார்.வீட்டைத் தவிர வேறு உலகைக்காட்டமல் தாத்தா தன்னை வைத்திருந்ததாக சாகும் வரை அம்மம்மா சொல்லுவார்.தான் படித்திருந்தால் இண்டைக்கு எத்தினை பெரியாளாக இருந்திருப்பன் எனபது இறுதிவரை அம்மாவிடம் இருந்த ஆதங்கம்.

இந்த சூழலில் சின்னம்மா அதிக சுறுசுறுப்பான ஒரு நபராகவே எனக்கு தெரிந்தார்.பள்ளிப் படிப்பை நிறைவு செய்த சின்னமம்மா குடும்ப வாழ்க்கைக்குள் போனதும் சுறு சுறுப்பான பெண்ணாகவே இருந்தார்.எங்களூரில் சின்னமம்மா வீட்டிலேயே முதன் முதலில் தொலைக் காட்சி வாங்கியாதாக அம்மா சொல்லியிருக்கிறா.சின்னத்தாத்தா அதிக சொத்துக் காரர் என்பதால் ஊரில் மாடி வீடு கட்டிய பணக்காரக் குடும்பமாக சின்னமம்மா குடும்பம் இருந்தது.

வேளாளர் ,பள்ளர், நளவர், கரையார், வண்ணார் உள்ளிட்ட சாதியினர் அதிகம் வாழ்ந்த எங்ளுரில் துரும்பர் என்ற ஒரு சாதியினரும் வாழ்ந்தனர்.துரும்பர் எல்லாரிலும் குறைந்த சாதியினரெண்டும் அவர்கள் ஒரு காலத்தில் காவோலை(காய்ந்த பனையோலை) இழுத்துகொண்டே வீதியில் போவர் என்றும் அம்மம்மா சொன்னர்.கவோலை இழுக்கும் சத்தம் கேட்டால் யாரும் வீதிக்கு வரமாட்டார்களாம்.

சின்னமம்மா விட்டிலும் நிறையப் பள்ளர்கள் வேலை செய்தார்கள்.அவர்களுக்கு தனி பேணிகளை கனடா போகும் வரை சின்னம்மா வைத்திருந்தார்.ஆனால் வேடிக்கை என்னவெனில் எனது அம்மாவின் திருமணத்தில் சின்னம்மா கலந்து கொள்ளவில்லை காரணம் சின்னமம்மாவின் மகள் அப்போதே கலப்பு திருமனம் செய்து கொண்டிருந்தார்.இதனால் ஊரில் பணக்கார, நிலபுல செல்வாக்குடையவரான சாதிய தடிப்புள்ள பிரிவினரான சின்னம்மாவை பொது விழாக்களில் கலந்து கொள்ள ஊர் ஒத்துக் கொள்ளவில்லை.

இருப்பினும் பின்னர் ஊரில் தவிர்க்க முடியாமல் சின்னமம்மா ஏற்றுகொள்ளப்பட்டர்.ஊர் பாடசாலைக்கு நிலம் ஒதுகியதில் இருந்து பல உதவிகளை ஊருக்காக சின்னமம்மா செய்திருந்தாலும் இறுதியில் கடந்த வருடம் ஊர் சென்ற போது ஊர் வேளாளர் சிலர் இவ்வாறு பேசிக்கொண்டனர் சின்னமம்மா கனடாவில் இருந்து கொண்டு நிலத்தை பள்ளருக்கு விற்று ஊரில் இருக்கும் வெள்ளாள ஆதிகத்தை உடைத்து விட்டர் என்று.இத்தனைக்கும் இதற்காகவே அருகில் இருந்த பல காணிகளை ஒரு காலத்தில் வாங்கி வைத்திருந்தவர் சின்னமம்மா.

நான் ஊர் பாடசாலையில் படித்த நட்களில் சின்னம்மா வீட்டில்தான் அதிகம் இருப்பன் தனியாளாக தேங்காய் உரித்து அதிகாலையில் சின்னத்தாத்தவோடு வண்டிலில் தேங்காய் கொண்டு சாவகச்சேரி சந்தைக்குப் போகும் போது அவரில் தெரியும் உசாரும் வேகமும் என்னை இப்போது வரை ஆச்சரியப் படுத்தும் ஒரு விடையம்.

எனக்கு தெரிந்து ஊரில் வேகமான ஒரு பெண்ணாக அவர் இருந்தார்.எப்போதும் அவருக்கு ஊரை விட்டு செல்வதில் பிடிப்பு இருந்ததில்லை.பரந்த தோட்டத்தில் நடந்த அவருக்கு கனடா ஒத்து வரவில்லை கடந்த சில வருடங்களாகவே சுய நினைவு மங்கியவராகவே அவர் இருந்தார்.அம்மம்மா தனது 83 வது வயதில் இறக்கும் போது கூட நிறைந்த நினைவாற்றலுடன் இருந்தமை ஆச்சர்யமானது.ஆனால் இறக்கும் போது 75 தொடுகிற வயதான சின்னமம்மா நினைவு தவறி வாழ்ந்தார்.

கனடாவை அவரால் சகித்திருக்க முடியவில்லை. ஓடிய அவரது கால்கள் ஓர் அறையில் கட்டப் பட்டதின் அவலம்.துரு துருவென இயங்கிய ஒரு விவசாயப் பெண்ணாக வாழ்ந்தவர் அவர். வீட்டுக்குள் அடங்கிபோய் தன் கனவுகளைத் தொலைத்த என் அம்மம்மாவைவிட உசார் பெண்ணான சின்னம்மம்மா ஒடிந்துபோய் சிலகாலம் இருந்து இறந்தார்.தோட்டத்தில் காலை முதல் இரவு வரை வேலை செய்வார்.பின்னர் அதிகாலையில் சந்தைக்கு வண்டிலில் புறப்படுவர்.அம்மா எனக்கு சுறு சுறுப்புக்கு உதாரணம் காட்டுவது சின்னம்மாவைத்தான்.

என் சின்னமம்மாவை எனக்கு நிறையப் பிடிக்கும்.அவரோடு வண்டிலில் போயிருகிறேன்.சமைக்கும் போது கூட இருந்து பேசியிருகிறேன் தென்னந்தோப்பில் நடந்திருகிறேன்.. . . . .எனக்கும் சின்னமம்மாவுக்குமான ஊடாட்டம் பற்றி சின்னம்மம்மாவின் அரவணைப்பை தனது சின்னக்காலங்களின் தவற விட்ட எனது கனடா அக்காவுக்கு கடந்தவாரத்தில் நினைவு மீட்டியிருந்தேன்.ம்..கடந்தாவரம் சின்னத்தாத்தாவுக்கும் சின்னம்மம்மாவுக்கும் திருமண நாள் வந்தது.....

ம்..இப்போது,

என் அம்மம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோ பதிவு எனது பார்வைக்காக கொடுக்கப் பட்டதைப் போல சின்னமம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோவும் எனக்கு கொடுக்கப் படலாம்.அம்மம்மாவின் இறுதிச் சடங்கு வீடியோவைப் போல இதையும் நான் பார்க்கப் போவதில்லை.

சென்னை மாடுகள்-போராட்டம் வெடிக்குமா?!

நான் வண்டியை வீதிக்கு எடுக்கவும் பக்கத்து வீதி மாடு பாய்ந்து வரவும் சரியாக இருந்தது.நான் வண்டியை ஒரத்தில் நிறுத்தி விட்டு மாட்டை ஒரு முறை முறைத்தேன்.பாவம் மாடு வேர்த்து விறு விறுத்து பத்தட்டமாக இருந்தது.காலையில் இருந்து அது சாப்ப்பிட வில்லை என்பது அதன் முகத்தில் தெரிந்தது.பழக்கமான மாடு என்பதால் என்ன ஏது என்று விசாரித்த போது த்ன் சோகக் கதையச் சொன்னது.

சென்னையில் எங்களது பிரதான உணவு சுவரொடிகள்.எங்களின் பெரும் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யும் சுவரொட்டிகளுக்கு பக்கத்தில் போகவே மாடுகள் பயப்படுகின்றன.என்னைப் போல துணிகரமான மாடுகள் கூட சுவரை நெருங்க முடியவில்லை காரணம் சென்னை முழுவது ஒட்டப் பட்டுள்ள திகிலூட்டும் போஸ்டர்கள்.கடந்த பத்து வருடமாக சென்னையில் போஸ்டர் தின்று வருகிறேன் ஒரு போதும் நான் இவளவு பயந்ததில்லை என்று சொல்லி நிறுத்தியது மாடு.

அப்படி என்னதான் என்று பார்க்க சென்னையை வலம் வந்த போது சுவருக்கு அருகில் சென்று தலை தெறிக்க ஒடிவரும் பல மாடுகளைப் பார்த்தேன்.



இது குறித்து மாடுகள் சங்கத்தின் துணைத் தலைவர் கோயம்பேடு பெரிய மாடு அவர்களை தொடர்பு கொண்டோம்."சென்னை நகரில் தற்போது ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்கள் காரணமாக மாடுகள் சுவருkகருகில் போவதற்கு அஞ்சுவதாகவும் இதனால் பல மாடுகள் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் அபாயம் இருப்பதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகான வேண்டும் இல்லையெனில் மாடுகள் பல்வேறு இடங்களிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும்" என்று ஓரே மூச்சில் கூறி முடித்தார் பெரிய மாடு.

மாடுகள் சுவரொட்டிகளை தின்பதை நிறுத்திவிட்டதால் சகல சுவரொட்டிகளையும் அகற்ற வேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு வந்துள்ளது.இதனால் சென்னை மாநகராட்சிக்கு பலகோடி ரூபாய் நஸ்டமேற்படுமென பதவி விலகிய கவுன்சிலர் ஒருவர் கூறினார்.இதேவேளை மாடுகள் சுவரொட்டிகளை அகற்றும் போது கட்சிப் பாகுபாடு இன்றி அகற்றுவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த பிரச்சனகளுக்கு காரணமான போஸ்டர்களைப் பார்த்தேன் அட நம்ம டி.ஆர் இன் வீராசாமி போஸ்டர்கள்.சென்னையில் சகல இடத்திலும் இடைவேளி எங்கெல்லாம் இருகிறதோ அங்கெல்லாம் மும்தாச் ,மேக்னா நாயுடு சகிதம் கையில் வாழுடன் நம்ம வீராச்சாமி.இதைப் பார்த்து குழந்தைகள் வெருண்டதும் நாம பயந்ததும் பழைய கதை இப்ப மாடுகளுக்கு இது பெரும் உணவுப் பிரச்சனக்கு வழி வகுத்து விட்டது

இதேவேளை மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள உணவுசிக்கலுக்கு காரணம் திமுக மைனாரிட்டி அரசுதான் என வைகோவும்.மாடுகளுக்கு ஆதரவாக கழத்தில் இறங்கப் போவதாக புரட்சித்தலைவி அம்மா அவர்களும் அறீவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அதிமுக ஆட்சியில்தான் அதிகம் நடந்துள்ளன மோனிசா என் மொனாலிசா காதல் அழிவதில்லை போன்றவற்றூக்கான சுவரொட்டிகள் அதிமுக ஆட்சியிலேயே ஒட்டப் பட்டதாக கலைஞர் அறிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பு: இன்னா மேட்டருன்னா வீராசாமி பத்திப் கலாச்சிகின்னே வீராசாமிக்கு கூட்டம் போய்கின்னு இருக்கு மாமு.

(ஒவரா போராடிச்சா என்ன பண்ணுறது. இப்ப்டி எழுதாலாமெண்டு புறப்பட்டுடன்....ஹி...ஹி)

Wednesday, January 31, 2007

முற்றவெளி -

மட்டக்களப்பின் மையப்பகுதி,
'மட்டக்களப்பு மாநகரசபை'என்ற பெரிய பெயர் பலகை,உயர்ந்து நிற்கும் காட்டடம் அதன் அருகே வாவியோரத்து முற்றவெளி, முன்னால் வெபர் மைதானம் அல்லது முற்றவெளி மைதானம்.கோட்டைச் சுவர் இவையனைத்தையும் இராணுவகச் சுருள் முட்கம்பிகளினூடே ஆவலாய்ப் பார்த்தன என் கண்கள் ஆயுதம் தரித்த 3 இராணுவத்தினரது கண்களும் 2 பொரிஸ்காரரது கண்களும் ஆயுதம் வைத்திருக்கும் இன்னுமொரு நபரது கண்களும் சமகாலத்தில் என்னைப் பார்த்தன.இண்டைக்கு இதை பார்க்கும் எனக்கு வயது 25.இன்றைய தேதி ஜூன் 15,2006.



(மட்டக்கள்ப்பு உயர் பதுக்கப்பு வலையம்)


ஒரு நாள் மட்டக்களப்பு முற்றவெளி அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாலைப் பொழுதிலிருந்தே எக்கச்சக்க கூட்டம். சிறிதரன், மாபி என்கிற சிறீபவன்(மாப்பிளையின் சுருக்கம்) பவுச்சா இன்னும் சிலர் வின்சற் மகளீர் பாடசாலைக்கு அருகில் இருக்கும் மகளிர் விடுதிக்கு முன்பு சீமைப் பனைகளுக்கு கீழே நின்று கொண்டிருந்தனர்.
அன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு இந்தப் பகுதி மிகப் பெரும் பொழுது போக்குப் பிரதேசம்."இண்டைக்கு யாரெல்லம் பாடபோறாங்களாம்" என்று கேட்கும் சிறிதரனுக்கும் வயது 25 தான்.

அது ஒரு பெரிய இசை விழா, ஏ.ஈ.மனோகரன் குரல் மட்டக்களப்பு மையப் பகுதி வரை ஒலிக்கிறது. "மட்டு நகர் மரகத வீணை மீன்பாடும்..... " இலங்கையின் முன்னணி பொப் இசை பாடகர்களும் மெல்லிசைப் பாடகர்களும் பாடிகொண்டிருகிறார்கள்.பொப் பாடல்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்களின் ஆட்டம் பலமாக இருகிறது.

முற்றவெளி முழுவதும் சரியான கூட்டம். மாநகரசபைப் பகுதி ஒளிவெள்ளத்தில் தெரிகிறது. சறோயினி,மலர்,தேவகி இன்னும் சில பெண்கள் அப்பா அம்மவோடு கோட்டைக்கும் அரச அதிபர் பங்களாவுக்குமிடைப்பட்ட ஆற்றங்கரைப்பகுதியில் உட்காந்திருக்கிறர்கள்.எல்லா இடமும் துள்ளல் பாட்டும் மெல்லிசைப் பட்டும் இரவு 11 மணி தாண்டிக் கேட்டுக் கொண்டிருகிறது.

தா தையத்தைய தா தையத்தைய....... வந்தேன் இராவண மகாராசன்.... தென்மொடிக் கூத்து சத்தம் முத்தவெளியில் இருந்து வருகிறது.

"என்ன கூத்துக்கு போறயா? ஆரு நம்மட கன்னங்குடா சினத்தம்பி அண்ணாவியாரா போடுறாரு?"

"ஓண்டா......"

"மறுகான்ன நானும் வாறன் அவர் போடுற கூத்த பாத்திட்டே இரிக்கலாமெல்லுவா....."
"அவளுகளும் கூத்து பாக்க போயிரிக்களுகள்......நீ அவளுகளப் பாத்து கூத்தாடாமவுட்டா சரி"


(இது இன்றைய கூத்துப் படம் 2003 இல் மட்ட்க்களப்பில் நடந்தது.)

முழுநிலவு நாளில வருசா வருசாம் முத்தவெளியில நடக்கிற கூத்து அதிகம் பிரபலமானது.தென்மோடி வடமோடி 2 வகை கூத்தும் வருசா வருசம் மாறி மாறி நடக்கும்.தர்மபுத்திரன் கூத்தும் இராவணன் கூத்தும் பிரபல்யமானவை விடிய விடிய முற்றவெளி களை கட்டியிருக்கும்.

என்ன....இதெல்லம் எப்ப நடந்திச்சு தெரியுமா? நான் பிறக்கிறதுக்கு முந்தி அதாவது 25 வருசத்துக்கு முந்தி. அப்பாதான் இந்தக் கதையளச் சொன்னார்.அதில இருக்கிற சிறீதரன் என்ர அப்பாதான்.நான் பிறந்த பிறகும் கூட மட்டக்களப்பில கூத்து நடந்ததாம்.90க்கு பிறகுதான் முற்றாக நின்று போய் விட்டது.அதுக்குப் பிறகு இந்தப் பகுதி முழுமையான இரணுவலையமாகப் போய்விட்டது.இந்தியன் ஆமியும் முத்தவெளியில தங்கியிருந்தவனுகள்.இப்ப இலங்கை இரணுவம் இருக்கு.

92 இல் நான் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மாணவனாக சேர்ந்து கொண்டேன்.

"சேர் றில்(உடற் பயிற்சி கண்காட்சி க்கான தயார்ப் படுத்தல்) பழகுறதுக்கு இண்டைக்கு எத்தினை மணிவரைக்கும் முத்தவெளிக்குள்ள விடுவானுகள்".

"காலையில 7 மணியில இருந்து 11 மணிவரைக்கும் "
எனது கேள்விக்கு சுரேசாநந்தம் சேரிடமிருந்து வந்த பதிலிது.

இப்ப நாங்க போவதற்கு அனுமதிக்கப்படும் முற்றவெளி முன்பு டச்சு மற்றும் ஆங்கிலேயர் காலத்து மயானமாக இருந்ததாம்.அருட் தந்தை வெபர் அவர்களின் முயற்சியால் இது பின்னர் மைதானமாக மற்றப் பட்டது இதனால் இதற்கு வெபர் மைதானம் என்று பெயர் சூட்டப் பட்டது. உணமையில ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் முற்றவெளியிலதான் கூத்து நடந்தது.அந்தப் பகுதியை இதுவரை நான் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை.எங்களுக்கு இது மட்டும்தான் முத்தவெளி.

இதுதான் மட்டக்களப்பு நகரில் இருக்கும் நான்கு பாடசாலைகளுக்கான ஒரே மைதானம்(புனித மிக்கேல் கல்லூரி,மெதடிஸ்த மத்திய கல்லூரி,விசன்ற் மகளிர் உயர்தப் பாடசாலை,புனித சிசிலியா மகளிர் பாடசாலை ஆகியவை அந்த நான்கு பாடசாலைகளுமாகும்) எங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டி காலத்தில் மட்டும் இந்த மைதானத்தை முழுமையாக எங்களால் உபயோகப் படுத்த முடியும்.மைதானத்தை சுற்றி இராணுவ பாதுகாப்பு அரண்கள் இருக்கும்.கிட்டத்தட்ட ஒரு இராணுவப் பாடசாலை மாணவர்களைப் போல சூழல் எங்களை மாற்றி விட்டிருக்கும்.

ஆன, அப்ப எங்களுக்கு அது பெரிய பிரச்சனையே அல்ல வின்சன்ட் ,கொன்வெண்ட் பொம்பிளப்பிள்ளையள் வரும் அதுகளும் நாங்களும் ஒரே மைதனத்தில் இருப்பது என்பது ........எவ்வளவு பெரிய நிகழ்வு.நான் மாணவத் தலைவனாக இருக்கையில் மற்ற மாணவர்களை ஒழுங்கு படுத்துறது. உத்தியோக பூர்வத்த தொடர்புகளை வைத்துக் கொள்ளுவது எண்டு வின்சன்ற் ,கொன்வென்ற் பிள்ளையளுக்க அறிமுகமாகிறதுக்கு எடுத்த பிராயத்தனங்கள் எத்தனை நான் மட்டுமில்ல என் சக மாணவ தலைவர்களும் எனக்கு முன்பிருந்தவர்களும் கூட......நாலு பொம்பிளப் பிள்ளையளுக்கு நம்மள தெரிஞ்சா அது நமக்குப் பெருமை எண்டுற காலமது.

வருசத்தில ஒருக்கா வெசாக் பண்டிகை(புத்த பகவான் ஞானம் பெற்ற காலம் இது யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட சர்வதேசப் பண்டிகை) இந்த மைதானத்தில கொண்டாடப் படும் அண்டைக்கு மட்டுதான் நங்கள் இந்தப் பகுதியில் ஒளியூட்டப் பட்ட இரவினைப் பார்க்க முடியும்.

"ஆச்சித்தப்பர லாளிலா பீச்சித்தப்பர லாளிலா ஆச்சித்தப்பர பீச்சித்தப்பர லாளிலாளி லாளிலா...."
சிறிலங்கா இராணுவ இசைகுழுவின் சிங்களப் பைலாப் பாடல்கள் அந்த முத்தவெளியை வியாபித்திருக்கும்.அன்றைக்கு ஒருநாள்தான் இரவில் வெளியில் வருவதற்கு அனுமதி என்பதால் சிங்களப் பாடல்களின் இடையே ஒலிக்கும் தமிழ்படல்களையாவது கேட்போம் என்று ஒரு பெரிய கூட்டம் வரும்.

விளையாடுவதற்கு இராணுவம் அனுமதித்த நாட்களில் இந்த பகுதி முழுமயினையும் பார்ப்பதற்கு ஆர்வப்பட்டு இரணுவப் பகுதிகளுக்குள் ஒரு நாள் உள்நுழைந்தோம்.துப்பாக்கி முனையில் ஒருமணி நேரம் வைத்திருந்துவிட்டு பின்னர் ஆசிரியர் முன்னால் எங்களை விடுவித்தனர் அதுவும் தண்ணிகுடிக்க வந்தம் தெரியாமல் வந்து விட்டோம் என்று சொன்ன பிறகு.

இலங்கை இராணுவத்தின் மட்டக்களப்பு தலைமையகம் இதுதான். எமது முத்தவெளியில்தான் இராணுவ உலங்கு வானூர்திகள் தரையிறங்கும்.இராணுவத்திற்கு பயிற்சிகளும் இந்த மைதானத்தில் வைத்து கொடுக்கப்படும்.
பெண்கள் பாடசாலை மாணவிகள் பயிற்சியில் ஈடுபடும் சமயங்களில் பெரும்பாலும் ஆண்கள் பாடசாலை மாணவர்களை உள்ளே விடுவதில்லை.இந்தப் பொழுதுகளில் அரைக் காற்சட்டை இராணுவத்தினர் மைதனத்தில் நிறைந்திருப்பர்.அவர்கள் செய்யும் பல சேட்டைகளை என் தங்கைகள் சொல்லக் கேட்டிருகிறேன்.

அப்போது என்னோடு படித்த ஒரு நண்பனொருவனுக்கு இதெல்லம் பார்க்கும் போது ஆத்திரமாதிரமாக வரும்.அவனுக்கு மட்டுமல்ல நாங்களும் இராணுவத்தை திட்டிகொள்ளாத நாட்கள் குறைவுதான்.மட்டக்களப்பின் மிக அழகான பகுதியொன்றை மயானமாக்கிவிட்டிருக்கும் இராணுவம் எங்களுக்கு பயங்கரமாகவே தெரிந்தனர்.

"இவனுகளை இங்கயிருந்து விரட்டணும்.நம்மட மைதானத்தில விளையாட நம்மள வுடுறதுக்கு அவனிட்ட கையேந்தோனுமாம் நிங்க போய் இளிச்சிக் கொண்டு நில்லுங்க.....அவனுகள் என்ன சோக்கா நம்மட இடத்துல விளையாடுறானுகள்"

இரணுவத்தினர் கிறீக்கற் உதைப்பந்தாட்டம், கூடைபந்தாட்டமெல்லம் வேளையாடுறதை மைதானத்தின் கம்பி வேலிகளுக்கு வெளியே இருந்து பார்க்கும் எங்களுக்கு கோவம் வரும்.அவன் இதையெல்லம் பார்த்து கொதித்துப் போவான்.

அந்த நண்பன் 1998 இல் படுவான்கரைக்குப் போனான். சமதான பேச்சுவார்த்தக் காலத்தில் அவனை கொக்கட்டிச்சோலையில் சந்திதேன். விடுதலைப் புலிகள் இயக்கதில் இருப்பதாக சொன்னான்.அவனை சந்த்தித்துவிட்டு வரும் போது என்னை கூட்டிச் சென்ற இன்னுமொரு நண்பன் சொன்னான்
"இவன் இப்ப ஆட்லறி பிரிவில இரிக்காண்டா............."

இப்போது 2006 இல் நிலமை இன்னும் மோசம் இந்தப் பகுதிக்கு அவசரத் தேவைக்கு மட்டும் என் நண்பர்கள் போய் வருவதாகச் சொன்னர்கள்.என்னையும் சும்மா போகத்தேவையில்லை என்றார்கள். அஞ்சல் அலுவலகம்,மெத்டிஸ்ட் ஆலாயம்,வில்லியம் ஓல்ட் மண்டபம்,மகளிர் விடுதி, வின்சன்ற் பாடசாலை இவற்றுக்கு போபவர்கள் மட்டும் போய்வருகிறார்கள்.முன்புபோல் சீமைப் பனைகளுக்கு கீழ் இராணுவம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் இளைஞர்களைக் கூடக் காணவில்லை.(கிளைவிடும் பனைமரமே சீமை பனைகள் இவை பனங்காய் போல ஒருவகை காய்களை காய்க்கும். ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் அரிய வகை இனம்)

துப்பாக்கி ஏந்திய அவர்களின் கண்கள் தொடர்ந்தும் என்னை நோக்கியே இருந்தன நண்பன் அவசரப் படுத்தினான் டேய் அவனுகள் உன்னப் பாக்கிறானுகள். நீ புது ஆள் பிரச்சனை வாரதுக்குள்ள கிளம்பணுண்டா.

சரியென்று ஹாயியார் ஹொட்டலுக்கு போவதற்காக வண்டியைத்திருப்பினோம்....

பெரியதொரு வெடியோசை ...

ஒரு பதட்டம்.....

ஹாயியார் கடைக்குள் நாம் ....

இன்னுமோரு சத்தம்......

பதட்டம் கூடியது.......

நண்பன் சொன்னான் படுவங்கரையில் இருந்து ஆட்லெறி வருகுது. முத்தவெளிக்கு பின்னால விழுந்திரிக்கலாம் இவனுகளுக்கு எதும் சேதமெண்டால் சிக்கல்.

என் பழைய நண்பண் எனக்கு நம்பிக்கை தருவதற்க்காக இதை அடித்திருக்க கூடுமோ....
என் மனது சொல்லியது. . .

***

(படுவான்கரை மாட்டக்களப்பு ஆற்றின் மேற்க்கு பகுதி இங்கு சூரியன் படுவதால்(மறைவதால்) இந்தப் பெயர் வந்தது கிழக்கு பகுதியில் சூரியன் எழுந்து(உதிப்பது) வருவதால் மட்ட்க்கள்ப்பு நகரம் இருக்கும் பகுதிக்கு எழுவான்கரையென்று பெயர்.படுவான்கரை முழுவதும் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது.)

Wednesday, January 24, 2007

பெண்களின் சேலை எத்தினை அழகானது தெரியுமா?

"ஒருகையில் கைப் பையும் மறுகையை பேருந்தில் பிடிப்பதுமாக நான் இருக்கையில் சேலை கட்டச் சொல்லும் உங்கள் காலாச்சாரக் காவலர்கள் எங்கள் இடுப்பில் தேடுவார்கள் நீங்கள் சொல்லும் தமிழையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்.."

ஒரு வலைத்தளம் இருக்கு.அதில் அவர் எழுறதும் அதுக்கு சிலர் போடுகிற பின்னூட்டமும் எரிச்சலூட்டுபவைகளாக இருக்கிறது என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார்.சரியெண்டு நானும் போய் பார்த்தன்.பின்னூட்டமும் போட்டன். சாதி,திராவிடம்,தலித் என்ற விவாதத்துக்குரிய பரபரப்புக்கு பஞ்சமில்லாத தலப்புகளின் வரிசையில் இப்ப பெண்கள் பஞ்சாபி வகையறாக்களைப் போடுறது கலாச்சார(?) வீழ்ச்சி எண்டுறார்.

உனமையிலையே இது பெரும் காலாச்சார வீழ்ச்சிதான் பெண்கள் என்பவர்கள் எங்கள் இனத்தின் கலாசாரக் காவலர்கள்.சினிமாவில் துகிலுரிந்து எங்கள் கலாசாரக் கட்டுமானங்களய் சீரழிப்பவர்களும் அவர்களே.டேய் பொட்டய்.. .என்று உச்சத் தொனியில் கத்தி பெண்கள் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு என்ற அணிகலன்களுக்கு உரித்துடையவர்கள் என்பதை உலகறியச் செய்து எமது பாரம் பரியத்தைக் கலாச்சாரத்தப் பாதுக்காப்பவர்கள் நமது ஆண்கள்.

இப்போது சென்னையிலும் காவல் துறை முதற்கொண்டு நமது துணைவேந்தர் விஸ்வநாதன்(அண்ணா பல்கலைக்கழகம்) ஈறாக பெண்களின் உடை விசயத்தில் அக்கறை செலுத்தி எமது உயர்ந்த கலாச்சாரத்தை காக்கும் ஆண்களுக்கு எமது ஒத்துழைப்பை குறைந்த பட்சம் இது போன்ற பதிவுகளிலாவது குடுப்பதுதானே நியாயம்.

இந்த விசயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழினத்துக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவே தெரிகிறது. பெண் போராளிகளுக்கு ஜீன்ஸ்,சேர்ட் போட்டு விட்டு அல்லது போடச் சொல்லி தமிழரின் கலாச்சாரத்தை கெடுத்து பிரபாகரன் துரோகம் இழைத்துவிட்டார் குறந்த பட்சம் அரசியல் பணியில் உள்ள போராளிகளையாவது சேலைகட்டச் சொல்லியிருக்கலாம். ம்...என்ன செய்வது அவர்களும் நீங்கள் சொன்ன பஞ்சாபியையோ அல்லது ஆண்கள் அணியும் ஆடைகளையோதான் அணிகிறார்கள்.

போர்புரிதலுக்கு இதுதான் வசதியென்று தலைவர் நினைத்ததினாலேயே பெண்களுக்கு இந்த உடை வந்ததென்று புலிகளின்மகளிர்அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி சொல்கிறார்.என்ன மடமையிது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி,பல சமஸ்தானங்களை ஆண்ட நாச்சியார்கள் எல்லம் சேலைதானே அணிந்தார்கள் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை.யாராவது இது குறித்து கூட பதிவு போடலாம்.

என்னதான் இத்தாலியில பிறந்தாலும் எல்லா இடமும் சேலை அணிந்தே செல்லும் சோனியா காந்தியை இவர்களுகெல்லாம் உதாரணம் காட்ட வேண்டும்.அண்மையில் அவர் பெல்ஜியம் போன போது கூட அந்த குளிரிலும் சேலயணிந்தே கோட் போட்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அட பவிகளா உங்கள் கலாச்சாரம் அந்த அம்மவின் சகிப்புதன்மையினை எவ்வளவுதூரம் சோதிக்குது

கடந்த வருடத்தில் ஒரு சர்ச்சை வந்தது செயலலிதா அணிவது சேலையா இல்லையா என்று. இன்றைய சட்டசபையாக இருந்தால் ஒரு தனி விவாதமே நடந்திருக்கும் (கணிதத்தில் 100 புள்ளியா 98 புள்ளியா என்பதெல்லாம் விவாதமாகும் போது இது எம்மாம் பெரிய பிரச்சனை).செயலலிதா அணிவது செலையில்லை யென்றால் உடனே அதிமுக உறுபினர்கள் கலைஞ்சர் பொண்ணு கனிமொழி என்ன அணிகிறார் என்ற அறிவு பூர்வமான கேள்வியை உணர்வுகள் நண்பர் கேட்டது போல சட்டசபையிலேயே கேட்டுவிடுவார்கள். தமிழகப் பத்திரிகைகளும் கலாச்சாரத்தின் பெயரால் 1 மாதம் நல்ல விற்பனையைப் பார்த்திருக்கும்.

ம்.....இதையெல்லம் விட எங்கள் ஆண்கள் படும் வேதனை யாருக்கு தெரியப் போகுது. எங்கள் கல்லூரியில் ஒரு விழா அடக்கும் பாரம்பரிய தினம் எண்டு அதுக்குப் பெயர்(அது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்) அண்டைக்கு மட்டும்தான் பெண்கள் சேலை கட்டி வருவார்கள்.எல்லப் பெடியளும் அதை பற்றியே பேசுவார்கள். அவளின் இடுப்பு சின்னது இவளுக்கு லேசா தொப்பை எண்டு தொடங்கி இன்னும் இன்னும் பலவற்றையெல்லம் பேசுவர்கள்.

இப்பிடி தமிழ் படத்தில பாலியல் வன்புணர்வுக்காட்சிகளில் துகிலுரியவும் பாடல்களின் கதாநாயகன் இழுக்கவும் பயன் படும் பெண்களின் சேலை எத்தினை அழகானது தெரியுமா? ம்...சேலை உண்மையிலேயே செக்ஸியும் அழகும்தாண்டா என் நண்பர்கள் சொல்லும் வார்த்தைகள் இவை.நானும் என்ன விதிவில்க்கா என்னையும் சேர்த்துதான். எல்லா அலுவலகங்களும் கல்லூரிகளும் பெண்கள் கட்டாயம் சேலை அணிய வேண்டுமென்று உத்தரவு போட்டால். என் நிறைய நண்பர்கள் பேருந்துக்காக காத்திருக்க ஆரம்பித்து விடுவார்கள்.

என்னையா.....கேட்க இனிமையாக இருகிறதா? கலாச்சாரத்தினை பெண்களின் சேலைகளுக்குள் முடிவதற்கு இனியும் நாம் வெட்க்கப்படாதிருப்பது எத்தன பெரிய .......தனம். என் தோழியொருத்தி என்றைக்கோ சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

"ஒருகையில் கைப் பையும் மறுகையை பேருந்தில் பிடிப்பதுமாக நான் இருக்கையில் சேலை கட்டச் சொல்லும் உங்கள் காலாச்சாரக் காவலர்கள் எங்கள் இடுப்பில் தேடுவார்கள் நீங்கள் சொல்லும் தமிழையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்...."

நண்பர்களே ஒரு ஆணாக உங்கள் நண்பனாக கேட்கிறேன் கலாச்சாரத்த தனியே பெண்களோடு முடிச்சுப் போடாதீர்கள். இது என்னை அடையாளப் படுத்துவற்காக சொல்லுகிற விசயமல்ல என் தங்கைகளும் தோழிகளும் எனக்கு புரிய வைத்தவைகள். ஏனெனில் நானும் சேலை கட்டுவதுதான் கலாச்சாரப் பாதுகாப்பு என்று நினைத்தவன்தான். எமது வளர்ப்பும் சூழலும் எங்களை அப்படி நினைக்க வைத்தன.

மாற்றம் ஒன்றே மாறாதது- கார்ல் மார்க்ஸ்.

Tuesday, January 23, 2007

வானம் ஏன் மேலே போனது-சிறுகதைத்தொகுப்பு

பிரபஞ்சத்தின் பல சூனியப் பிரதேசங்களுக்கு
நான் சொந்தக்காரியாய் இருந்தேன்.

வாயில்லாக் காற்றுடன் பேசினேன்.
நட்சத்திரக்கூட்டத்தின் ஏணி தொலைத்தேன்
காற்றில் தடம் பதித்தேன்
காற்றில் கிறுக்கினேன்
காற்றுண்டேன்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பொதுவாய்ப் பெருவெளியில்
நான் மட்டும் நான் மட்டும்
தனிமையை சிறகு விரித்தேன்
அலைந்தேன்..

என்று சொல்லும் விஜயலட்சுமி சேகர் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்.அண்மையில் வெளிவந்த "வானம் ஏன் மேலே போனது" என்ற அவரது சிறுகதைத் தொகுப்பில் அவர் பேசும் மொழியிது.

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் உணர்வுகள் கொலைசெய்யப் படும் பெண்களின் வலிகளை சாதாரண மொழி நடையில் சொல்லியிருகிறார்.சிறுகதைகளில் மட்டக்களப்பு பேச்சு வழக்கும் சூழலும் நிறையவே தெரிகிறது.

ஒவ்வொரு கதயிலும் சாதாரண பெண்களின் வலி தெரிகிறது.ஒவ்வொரு வீட்டுகுள்ளும் பெண்களுகெதிராய் நடக்கும் வன்கொடுமைகளை சாதரண வாசகனுக்கும் புரியும் படியான இலகுவான சொல்லாடலும் யதார்த்தத்தனமும் கதைகளில் தெரிகிறது.கிழக்கில் இருந்து வரும் குறைந்தளவான பெண் எழுத்துகளில் விஜயலட்சுமியின் எழுத்துகளும் இப்போது சேர்ந்துள்ளன.

'எண்ணை வற்றிய குப்பி விளக்கின் மங்கிய ஒளியில் இவளது முகத்தில் அப்பிக் கிடக்கும் வேதனை, விளக்கிற்கு மட்டுமே புரிகிறது.'
என்ற வார்த்தயில் உள்ள கனதியை எல்லாக் கதைகளிலும் காண முடிகிறது. இந்தக் கதைகளுக்கு என்னால் எந்த விமர்சனமும் சொல்ல முடியவில்லை வாசிக்க மட்டுமே முடிந்தது. ஒரு வகை நெருடலும் வலியும் மட்டுமே எனக்கு இந்த கதைகளை வாசித்த போது மீதியாய் வந்தன.

"நிச்சயமாக அசோக்குமார்,பாலு மகேந்திரா,மணிரத்தினம் எவரது கமராக்களுக்கும் அவளது முகத்தில் தெரியும் கவலையின் கோடுகளைக் காட்டும் திறமை இருக்காது" என்ற விஜயலட்சுமியின் வரிகளினையே என்னாலும் உங்களிடம் இந்தச் சிறுகதைகள் குறித்து சொல்ல முடியும்.

வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம்,சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.
மின்னஞ்சல்:panikkudam@gmail.com
விலை:ரூ.30

Friday, January 05, 2007

திறந்த வெளிச்சிறைச்சாலை..விகடன் கட்டுரை

யாழ்ப்பணம் திறந்த வெளிச்சிறைச்சாலை.......

யாழ்ப் பாணம் பற்றிய எனது கட்டுரை ஒன்று இந்தவார ஆனந்தவிகடனில் வெளிவந்துள்ளது.இன்றைய யாழ்ப்பாணச் சூழல் பற்றிய நேரடிப் பதிவாக அங்குள்ளவர்களோடு பேசி இந்த கட்டுரையை எழுதினேன்.

http://www.vikatan.com

இந்தப் பக்கதில் விகடன் கட்டுரைகளைப் பார்க்க முடியும்.

சில படங்களை மட்டும் உங்களுக்கு தருகிறேன்.


யாழ் நகரப் ப்குதியில் கெடுபிடியான இராணுவப் படையினன்


யாழ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் இராணுவ உயர் பாதுகாபு வலையம்.இதனைச் சூழவுள்ள 3 பிரதான வீதிகளும் பல வீதிகளும் மூடப் பட்டுள்ளன. யாழ் வைத்திய சாலை இந்த உயர் பாதுகப்பு வலையத்தின் எல்லையிலேயே உள்ளது. இப்போது பேருந்து தரிப்பிடம் இப்பகுதியில் இருந்து மாற்றப் பட்டுள்ளது.


இது கட்ந்த வருடத்தில் என்னால் எடுக்கப் பட்ட படம் அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலையப் பிரதேசம். அரியாலை யாழ் மாநகரசபையின் எல்லைப் பகுதி. 2000 த்தில் விடுதலைப் புலிகளால் கைபற்றப் பட்டு இந்திய அழுத்தத்தினால் இலங்கை இராணுவ வசமானது.

Tuesday, January 02, 2007

சங்கத்தானை இரயில் நிலையம்.

சங்கத்தானை இரயில் நிலையத்தின் பின்பகுதித் தோற்றமிது. அ 9 சாலை பின்பகுதியில் தெரிகிறது.சாவகச்சேரி சந்தியிலிருந்து தொலைவில் இந்த இரயில் நிலையம் உள்ளது. இதற்க்கு முன்பாகவே சங்கத்தானை இந்து கல்லூரியும் உள்ளது. 200 தொலைவில் சாவகச்சேரி வைத்திய சாஅலை உள்ளது.

இதனை தவறுதலாக சாவகச்சேரி இரயில் நிலையம் என்று குறிப்பிட்டு விட்டேன். அதனைத் திருத்திய அனானிக்கு நன்றி.



ஒருகாலத்தில் யாழ்தேவி புகையிரதம் தரித்து நின்ற பகுதி இன்று இராணுவ பாதுகாப்பு அரண்.
கடந்த வருடத்தில் மட்டும் இந்தப் பகுதியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 வதுக்கும் அதிகம்
இந்தப் பகுதியில் கடந்த வருடத்தில் மட்டும் குறைந்தது 3 கிளைமோராவது வெடித்திருக்கும்.

Monday, January 01, 2007

நிர்வாண ராணுவம்!

ஆண்குறிகளோடு அலையிற ராணுவம் எங்களுக்கு புதிசில்லை. சண்டை கோரமா நடக்கிற இந்த 25 வருசத்தில துப்பாக்கிகளை பிடிக்க மறக்கிற சந்தர்ப்பத்திலையும் தங்கடை ஆண்குறிகளை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு என்ர தோழிகளையும் அக்காக்களையும் தங்கைகளையும் அம்மாக்களையும் தேடி அலையும் கேவல ராணுவத்தை வீதியெங்கும் பாக்கிறன்.

நேற்று மன்னார் வங்காலையில நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இண்டைக்கு இந்தப் பதிவை நான் இட்டுக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில எங்கோ தமிழர் தாயகத்தின் ஏதோ ஒரு மூலையில் வெளித்தெரியாமல் வேட்டையாடப்படும் என் சக மனிதனின் என் சகோதரியின் கதறல் ஒலி என் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கோணேஸ்வரி, கிருசாந்தி, சாராதாம்பாள், தர்சினி, என்று நீளும் பட்டியல் மட்டுமே நமக்கு தெரியும். வேட்டையாடப்பட்டு தன் ஆண்குறி அடங்கியும் கோரமடங்காமல், இரத்தம் பார்க்கும் ராணுவ வேட்டைகளின் கொல்லப்பட்ட ஒரு சிலரைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம். தினம் தினம் உடலில் உயிர் இருந்தாலும் நிர்வாணமாய் அலையும் ராணுவப் பசிக்கு இரையான எத்தனை என் தோழிகளை அவர்களின் உணர்வுகளை இன்னும் எத்தனை நாள் சுமக்க போகிறோம்.

ஆண்குறியோடு அலையும் ராணுவத்திற்குள் பிரிவுகள் இல்லை. உலகின் எல்லா ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் தங்கள் பசியை அடக்க கிடைத்த ஒரே வழி பெண்கள்.

80 களின் இறுதிப் பகுதிகளில் ஒரு நாள் என் காது கேட்க என் அம்மாவிடம் பக்கத்து வீட்டு அக்கா கதறியபடி ஏதோ சொல்லி கொண்டிருந்தார். அதற்கு சற்று முன்னர் தான் இந்திய ராணுவத்தால் 3 மணி நேரமாய் என் கிராமம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அண்டைக்கு ஒலிக்க தொடங்கின அந்த கதறல் குரல் இன்னும் எனக்குள்ளை ஒலிக்குது.

சமாதானம் சமாதானம் எண்டு நாலு வருசம் ஆடின நாடகத்தில பார்வையாளராய் இருந்த எங்கடை சனம் எல்லாம் இப்ப மரணத்தின்ர பிரதான பங்காளியாய் மாறிப்போயிருக்கு. ஆனா அந்த நாடகத்தில நடிச்சவைக்கு இருக்கிற பாதுகாப்பு நாடகத்தை பாத்துக்கொண்டிருந்த சனத்துக்கு இல்லை.நாடகம் நடக்கேக்கை வெறியோடை பாத்துக்கொண்டிருந்த ராணுவம் இப்ப வேட்டையாடத்தொடங்கிட்டுது. வேட்டைக்காரனுக்கு இப்ப வேட்டை இலக்கில்லை. கைக்குள்ளை அகப்படுற எல்லாத் தமிழரின் இரத்தங்களையும் பெண்களின் உடல்களையும் ஆண்குறி ஏந்தி திரியும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் ருசிக்கத் தொடங்கி விட்டன.நாலு வருச சமாதான காலத்தில வீதியில போற எங்கடை பொம்பிளைப்பிள்ளையளை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஆண்குறி பிடித்தபடி பாத்தக்கொண்டிருந்த 'வெறிலங்கா'ப்படைகள் மன்னிக்க வேணும் "சிறிலங்கா"ப் படைகள் இப்ப தங்கள் ஆண்குறி அடக்க ஆணுறைகள் சகிதம் வேட்டையாட புறப்பட்டு விட்டன.

விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த பெண்கள் படையணிகளை உலகம் வியக்க உருவாக்கினர். வேட்டையாடும் வெறிகார ராணுவத்தை அடக்க பல வெற்றி சமர்களை நடத்தியது. ஆனாலும் இண்டைக்கும் இந்தக்கணத்திலையும் குருதிக்குள் உறைந்து போன என் அக்காளின் கோரப் பிணத்தை பார்க்கும் துரதிஸ்டம்...
என்னைக் கேட்டால் ஆயுதம் தூக்கின என்ர அக்காக்களே, தோழிகளே, தங்கச்சிகளே, முடிஞ்சால் அடியுங்கோ.. தயவு செய்து ஆண்குறியோடு அலையும் ராணுவ வெறியர்களுக்கு எங்கடை பெண்களை தேடியலைய நேரம் குடுக்காதேங்கோ..வன்னிக்குள் எல்லோரும் போய் ஒழிய முடியாத யதார்த்த சூழலில் ஓநாய்களின் காவலில் நாங்கள் வாழுகிறோம். அவர்களுக்கு பசிக்கிற போதெல்லாம் எங்கள் பெண்களை புசிக்கலாம். குழந்தைகளின் இளம் குருதி குடித்து கூத்தாடலாம். இது கோரம்..இதை பேசுகிற போது கோவத்தையும் விரக்தியையும் தவிர எதுவும் செய்ய முடியாத வெறும் கையாலாகததனம் மட்டுமே மிஞ்சி நிக்கிறது.. .

எங்கள் இணைத்தளங்களினதும் பத்திரிகைகளினதும் இடங்களை நிரப்ப , இனியும் இந்தப் படங்கள் வேண்டாம். ஐயோ.. என நாங்கள் வைக்கும் ஒப்பாரி உலகத்திற்கு கேட்பதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு இருக்கெண்டு எனக்கு தெரியேல்லை. ஒரு வேளை உலகில் நடக்கும் இந்தக் கோரங்களைப் போன்ற கோரங்களுக்குள் என் வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து வீறிட்டெழும் அலறலும் அடங்கிப் போகலாம்.

இதுக்குமேல பேச எதுவுமில்லை..

இன்னும் எத்தனை நாள் என்ரை பேனாவுக்குள்ளை இரத்தம் ஊத்தி எழுதப்போறனோ தெரியேல்லை..

இவ்வளவு நேரம் எழுதினது வார்த்தையில்லை..
என்ர வலி இது எங்கடை இனத்தின்ர வலி..


ஜனாதிபதி மகிந்தவுக்கு:தயவு செய்து உங்கடை ராணுவத்திற்கு ஆண்குறி அடக்க ஏதாவது வழி செய்யுங்கோ..இரணுவத்தினரை மட்டும் இதுக்கு குறை சொல்லேலாது.. அவையள் கூலிக்கு மாரடிக்கினம். புலிகள் மாதிரி போராளிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில இருந்து தன்ர ஊருக்கு போகேலாமல் தன்ர மனிசியை பாக்கேலாமல் விரக்தியோடை இருக்கிறவைக்கு ஆண்குறி அடக்கிறதுக்கு என்ர உறவுகளை பலியாக்க வேணாம். எதுக்கெல்லாமோ பாதுகாப்பு கவுண்சிலையோ சர்வ கட்சி மாநாட்டையோ கூட்டுறனிங்கள் இதுக்குமொருக்கா கூட்டிப்பாருங்கோ.. கொழும்பில கூத்தாடுற மேற்தட்டு வர்க்கம் பாதுகாப்பா தாகம் தணிக்குது. அங்கை பாதுகாப்பு படைக்கு வெறியெடுக்குது. அவங்களுக்கும் தாகம் தணிக்க ஒரு அமைச்சை உருவாக்கி அமைச்சரையும் போட்டு ஏதேனும் செய்யுங்கோ.. தயவு செய்து உங்களின்ர கொண்டாட்டங்களுக்கு எங்களை பலியெடுக்காதைங்கோ..