Wednesday, July 30, 2008

சினிமாக்களுக்கு நடுவில் எனது ஆவணப்படம் குறித்த பதிவு..

கடந்த மாதம் ஒன்றாம் தேதி மாலை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஐம்பது நிமிடங்கள் படம் ஓடி முடிந்தபோது, அரங்கில் இறுக்கமான அமைதி. படம் உருவாக்கிய கொந்தளிப்பு பலரின் விழியோரம் கண்ணீர் துளியாக வெளிப்பட்டிருந்தது. என்னை அழவைத்துவிட்டது என்றார் உணர்ச்சிப் பெருக்கை கட்டுப்படுத்த முடியாத இயக்குனர் பாலுமகேந்திரா.

அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்த அந்த ஆவணப்படம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி சிங்கள பேரினவாத அரசால் முற்றிலும் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தைப் பற்றியது. அதனை எடுத்த சோமிதர‌ன் யாழ்ப்பாண தமிழர். போரை அனுபவித்த தலைமுறை என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சோமிதர‌னிடம் ஆவணப்படம் குறித்து உரையாடினோம். முதலில் அவரைப் பற்றி...


'வெப்டூனியா' என்ற இணையத் தளத்தில் முற்று முழுதான தமிழ் சினிமா ஆக்கிரமிப்புக்குள் ஒரு ஆவணப் படம் பற்றிப் பதிவு செய்திருப்பது ஆச்சரியமானது. எனது ஆவணப்படம் குறித்த பதிவும் எனது நேர்காணலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. சில தவறுகளும் எழுத்துப் பிழைகளும் உள்ளன. முழுமையான பேட்டிக்கு கீழ் இணையத்தளத்தைப் பார்க்கவும்.
http://www.tamil.webdunia.com/entertainment/film/interview/0807/21/1080721033_1.htmhttp://