Wednesday, June 21, 2006

நீண்ட இடை வெளிக்கு பிறகு ....

நீண்ட இடைவெளி ஒன்றிற்குப் பிறகு உங்களோடு பயணப்பட ஆரம்பிக்கிறேன்.இந்திய நகரங்களிலும் வீதிகளிலும் சுற்றுகிறபோதும், இலங்கையில் சுற்றி கொண்டிருக்கும்போது நான் பார்க்கின்ற பல விடையங்களை உங்களோடு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

இப்போது ஒரு வருடதிற்கு மேலாக பத்திரிகைகளிலும் நான் எழுதுவதில்லை.அது எதுவும் பிடித்தமற்றதாகவே எனக்கு தோன்றுகிறது.ஆனால் தமிழ்மணத்தில் பதிவு செய்யபடும் பதிவுகள் எனக்கு நிறைய உற்சாகத்தை தருகின்றன.ஒப்பீட்டு ரீதியில் இணைந்து பணியாற்ற முடியாத ஒரு புதிய தலைமுறையின் மனிதர்களாக நாங்கள் இருக்கிறோம்.

இந்தியாவில் என்னால் முடிந்தளவுக்கு இலங்கையில் கூட்டான வேலைகளை செய்வற்கு என்னால் முடியவில்லை.உண்மையில் கடந்த 25 வருட கலத்தில் தனது பெரும் பகுதியை கழித்த இத தலைமுறையினர் பெருமளவில் புலம்பெயர்துவிட்டனர் இல்லையெனில் விடுதலை போராளிகளாக உள்ளனர்.யாரும் யாருடனும் எதையும் பகிர்ந்துகொள்ளுவதற்கோ விவாதிப்பதற்கோவான மனநிலையும் சூழலும் எங்களிடம் இல்லை.அந்தவகையில் தமிழ்மணத்தில் குறைந்தளவிலாவது கருத்தாடல் இடம்பெறுவது மகிழ்ச்சி.

உண்மையில் இலக்கியங்கள் பற்றியும் இசங்கள் பற்றியும் நான் வசிக்க முற்பட்டதற்கு சசிவனும் நானும் 2003-2004 காலப்பகுதியில் தங்கியிருந்த மயூரன் வீடும் காரணம்.சசிவன்,மயூரன்,கோபி
ஆகியோருடன் நிறைய கதித்திருக்கிறேண். என்னை விட அதிக வாசிப்பளர்களான இவர்கள் மூவருடனும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய நிறைய வேலைகள் பற்றி பேசியிருகிறோம்."ம்"பத்திரிகை அடிக்க நினைத்தது உட்பட.ஆனால் கூட்டாக ஏதேனும் செய்வதற்கான ஒரு புதிய அணி உருவாகியாதாக தெரியவில்லை. ஆனாலும் நூலகம் முயற்சியில் கோபியும் மயூரனும் ஒன்றிணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி.

எனது இந்தப் பதிவிற்கான தொடக்கமும் உங்கள் எல்லோரோடும் இணைந்துகொள்ளூவதுதான்.பெரும்பாலும் விரவில் எனது ஆவணப் படங்கள் குறித்து பதிவிடுவேன்.இப்போதுதான் யர்ழ்பாணத்தில் எனது ஆவணப் படத்திற்கான படப் பிடிப்பை நிறைவு செய்திருகிறேன்.அடுத்த கட்ட வேலைகளை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளேன்.

சரி இது கடந்த காலங்களைப் போல் பதிவிடாது இருந்த நிலைபோலல்லமல் தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு முதல் பதிவே.


||எனக்கு முதல் பதிவிட தமிழ்மணம் blog என்பவற்றை அறிமுகம் செய்து அழைத்து வந்து வலைப் பதிவை உருவாக்கித்தந்த மயூரனுக்கும் என்கூடவே எப்போதும் இருக்கும் த்மிழ்மண்த்தில் உள்ள முக்கியமான விசயங்களை அறியதரும் புது விசயங்களை இணையத்தள்ங்கல் தொடர்பாக கற்றுத்தரும் நண்பன் *சயந்தனுக்கும் நன்றிகள் ||

*சயந்தந்ன்- எனது முதலும் கடைசியுமான கவிதையை பிரசுரித்த சஞ்சிகையின் ஆசிரியர் எனது எழுத்துக்கு முதல் அச்சு வடிவம் கொடுத்து கொழும்பில் அறிமுகப்படுதியவர்(சந்தொசம்தானே மச்சான்)