Tuesday, October 23, 2007

யாழ்ப்பாணியும் மட்டக்களப்பானுமாகிய நான்.

காட்சி 1
இடம் -மட்டக்களப்பு

நான் அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.மட்டக்களப்பின் வடக்குப்புறத்தே வாழைச்சேனைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே ஏறாவூர் என்று ஒரு ஊர் இருக்கு அது பாதிக்குப் பாதி முஸ்லிம்களையும் தமிழர்களையும் கொண்ட ஊர்.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருந்த ஊடலையும் உறவையும் கொலைகளையும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சொல்லுகிறேன்.இப்போது சொல்லயிருக்கிற கதை வேற கதை.

கிழக்கிலங்கையில் ஏறாவூர் காளிகோயில் பிரசித்தமான ஒன்று.தட்டார்கள் எனப்படும் விஸ்வகர்ம குலத்தினரால் நிர்வகிக்கப் படும் அந்த கோயிலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளும் அந்த குலத்தினரின் சொத்தாக இருந்தது.அவர்களைத் தவிர யாழ்ப்பானத்தார்களே அதிகம் அந்தப் பகுதியில் இருந்தனர்.யாழ்ப்பாணத்தார் என்றால் வெள்ளாளர்தான் பெருமளவில்.பருத்தித்துறை,வியாபாரிமூலை(இது பருத்திதுறைக்கு பக்கதிலதான் இருக்கு)மற்றும் தீவக காரர்கள்தான் அதிகம்.

இந்தப் பகுதியை 4 ம் குறிச்சியெண்டும் சொல்லுவார்கள்.5ம் குறிச்சி ஏறாவூரின் அடுத்த பகுதி இதுவும் தமிழர் வாழும் பகுதி.1 ம் 2 ம் 3ம் குறிச்சிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.

அண்டைகொருநாள் பள்ளிக்கூடத்தில படித்துக் கொண்டிருந்தன். யாழ்ப்பாணி உன்னை வெட்டணுண்டா.....எனக்கு தெரிந்தவரையில் அது -----(பெயர் சொல்லாமல் விடுறன்) அக்காவின் குரல்தான்.(அவவுக்கு ஒரு 45 வயதிருகலாம்) எங்கட பள்ளிக்கூட வகுப்பறை வரை குரல் கேட்டது.காளி கோயில் திருவிழா காலத்தில் மட்டும் அவவுக்கு குரல் அடைக்கும் மற்றம் படி நல்ல குரல். இப்பிடித்தான் அடிகடி ஏதாவது சண்டை வந்தால் யாழ்ப்பாணி என்ற குரல் பறக்கும்.

மட்டக்களப்பில் உள்ள பெருமளவு பலசரக்கு கடைகளும் மொத்த விற்பனை நிலையங்களும் யாழ்ப்பாணத்தவர்களுடையதே. ஏறாவூர் அதற்க்கு அண்டிய செங்கலடி போன்ற இடங்களிலும் இதே நிலையென்பதாலும் கோயில்களில் இருந்த யாழ்ப்பாணத்து பிராமண ஐயர்களின் ஆதரவில் யாழ்ப்பானத்தவர்களுக்கு கிடைத்த முன்னுரிமையும் ஏறாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு எரிச்சலூட்டியதில் வியப்பில்லை.

இப்பிடியான சூழலில் நான் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 3 ம் வகுப்பு படிச்சுக் கொண்டிருந்தன்.(ஏறாவூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் என்றும் உண்டு இது அலிகார் மகா வித்தியாலயம் என்றும் சொல்லப் பட்டது) அப்ப நான் நல்ல கெட்டிக்காரன்?! வகுப்பில முதல் மாணவன் (இப்ப ? ). இப்படியிருக்கையில் 3ம் வகுப்பில் புதிய வகுப்பு ரீச்சருக்கு என் மீது
ஏனோ கோபம். நான் நல்ல எழுதினாலும் திட்டுவார். இப்பிடி அவவைப் பிடிக்காமலே என் மூன்றாம் வகுப்பு ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் பள்ளிக்கூடத்தில நிண்ட இலந்த மரதில இலந்தப் பழம் பறிச்சு சாப்பிட்ட 10 மாணவர்கள் மாட்டுப்பட்டம் கையும் மெய்ய்யுமாக .(இலந்தப் பழம் புளியம் பழக் கோதுபோல கோதுடைய உருண்டையான திராட்சை அளவு பருமன் உள்ள பழம் புளிப்புச் சுவை) ஆனால் என்னை மட்டும் அம்மாவைக் கூட்டிவரச் சொல்லி பேச்சும் கொடுத்தார். நாட்கள் இப்படி நகருகையில் மேலை வகுப்பு மாணவ்ர்கள் என்னை யாழ்ப்பாணி என்றும் பனங்கொட்டைசூப்பி எண்டு சொல்லுவதும் எனக்கு எரிச்சலூட்டியது. ஆனாலும் என் சக தோழர்கள் என்னை அப்பிடிச் சொன்னதில்லை.
இப்படியே எனது 3ம் வகுப்பு முடிந்த போது 4ம் வகுப்புக்கு போவதற்க்கு முதலே டிசம்பர் விடுமுறையில் படிப்பதற்க்கு பாடப் புத்தகங்கள் தருவார்கள்.அது பெரும்பாலும் முன்னர் படித்த மாணவர்களின் பழைய புத்தகங்கள்(இலங்கையில் அரசாங்கத்தினால் சகல மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகம் வழங்கப் படும்) வகுப்பில் முதலாவதாக வரும் மாணவனில் இருந்து கொடுக்க ஆரம்பித்து புத்தகம் தீரும் வரை உள்ள மாணவர்களுக்கு கொடுப்பார்கள்.ஆனால் எனக்கு கொடுக்கவில்லை.காரணம் அந்த ரீச்சருக்கு என் மீதிருந்த கோபமே.

என் வகுப்பு தோழர்களுக்கு எனக்கு தராதது வருதமாக இருக்க என் தோழன் ஒருவன் ஏன் ரிச்சர் சோமிக்கு புத்தகம் கொடுகலை என்டு கேட்டான். யாழ்பாணியள் இங்கவந்து படிச்சு உங்கலை முந்துவாங்கள் நீங்கள் வழிசல்கள் மாதிரி வாய் த்துக்கொண்டிருங்க.....என்றார் சத்தமாகா..

காட்சி-2

இடம் -யாழ்ப்பாணம்

சாவகச்சரியில் இருக்கும் அந்த ஊர் எனது அம்மாவின் சொந்த ஊர். நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மட்டக்கலப்பில் இருந்து வந்தவன் எண்ட படியால எல்லாரும் சற்று தள்ளியே இருந்தார்கள்.இருந்தாலும் நளவர் வீட்டுப் பிள்ளைகள் இருக்கும் வங்குக்கு என்னை அனுப்பாமல் விட்டதில் அம்மவின் சொந்தகாரரான அந்த ரீச்சருக்கு பெரும் பங்கு உண்டு.

அவள்தான் அந்த வகுப்பின் முதல் மாணவி நல்ல அழகு துறு துறுவென இருப்பாள்(அவள் பற்றியகதை பெரும்கதை அது 12 வருசக் கதை அதைப் பிரகு சொல்லுறன்) அந்த பள்ளியில் செர்ந்த முதல் தவணைத் தேர்விலேயே நான் 2ம் மானவனாக வந்தேன்.இரண்டாம் தவணையும் இதை தக்க வைத்துக் கொண்டேன்.ஆனாலும் என்னுடன் அவ்வளவாக யாரும் சேருவதில்லை.பள்ளர் பிள்ளைகள் மட்டும் என்னுடன் கொஞ்சம் பழகினர்.

மூன்றாம் தவணையில் நாந்தான் முதல் மாணவன்.தேர்வு மதிப்பெண் அட்டை கிடைத்தது எனகு மட்டும் மேடையில் கொடுத்தார்கல் முதாலம் பிள்ள்ளைக்கு அப்பிடி கொடுபது மரபு.5ம் வகுப்பு தொடங்கியது வகுப்பு ரீச்சர் மாணவகளுக்கு அட்வைஸ் கொடுத்தார் ஸ்கொலஸிப் வக்குப்பு நல்ல படிக்கவேணும் அங்க பாருங்க அவன் மட்டகளப்பான் அங்க படிச்சிட்டு வந்து உங்களை முந்திட்டான் ......என்று தொடர்ந்தது அவர் பேச்சு...அவள் என்ன நோக்கி நக்கலாகச் சிரித்தாள்...
அடுத நாளில் இருந்து நான் பள்ளிக்கு கட் அடித்தேன்...என் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரிட்டசையை மட்டக்களப்புக்கு போய் எடுத்தேன்.எனது பள்ளியில் நான் மட்டுமே சித்தியடந்தேன்.வழமையாய் பாரட்டு விழா வைக்கும் அந்த பள்ளிக் கூடம் இம்முறை அப்படியொரு விழாவை வைக்கவில்லை.நான் மட்டும் பள்ளி முழுவது சொக்லேட் கொடுதபடி இருந்தேன்....

இன்னொரு விசயம் நான் யாழ்ப் பாணத்தில 5ம் வகுப்பு படித்த போது புலிகளின் பேச்சுப் போட்டியில் தென்மராச்சியில் முதல் பரிசு வாங்கி புலிகளுக்காக பல இடங்களில் பேசித்திரிந்தேன்...அப்போது அந்த சின்னவயதில் எங்களூரில் பேசும் போது அவளின் அப்பாவ
ன் கையப் பிடித்தபடி அவள் என்னைப் பார்த்த பார்வை இப்போது வரைக்கும் நினைவிருக்கு நான் நினைகிறன் அவளுக்கு முன்பிருந்த வெறுப்பு இப்போது இல்லையென்றூ

4 comments:

Anonymous said...

ahhaa...ahhaaa....nallaathaan kilapuraangkaiyaa peethiya....

Anonymous said...

பனங்கொட்டையும் தேயிலைக் கொட்டையும்...

நண்பர் சோமிக்கு...
தங்களைப் போலவே எனக்கும் ஒரு அனுபவம் உண்டு...
தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...
சிறு குறிப்பு மட்டுமே....

பிறந்தது பனங்கொட்டையாக....
வளர்ந்தது தேயிலைக் கொட்டையாக...

ஆரம்ப படிப்பு பனங் காட்டில்...
புpன்பு தேயிலைக் காட்டில்...
புpன்பு பனங் காட்டில்...
புpன்பு சினமன் காட்டில்...
இப்n;பாழுது மேபில் லீவ் காட்டில்...

இந்தக் கொட்டைகளுக்கு இடையில் ...
நான் பட்ட படும் பாடுகள்....

எந்த ஒரு இடத்திலும்...
மனிதராக பார்க்கப்படவில்லை...
நானும் இருக்கவில்லை...

இந்தக் கொட்டைகளையும்...
காட்டான்களையும் தாண்டி..
மனிதம் வளருமா????
நண்பரே!

Anonymous said...

nisamaaththaan solluringkalaa?

ippillaam irukkaaa?

Unknown said...

உண்மை அழியாது.