Sunday, April 19, 2009

தமிழீழ போரில் செத்த மக்களை திருப்பி தர முடியுமா


இரண்டு ஈழத்தவர்கள் ஜீமெயிலில் நடத்திய சாற்றிங் உரையாடல்இது. இருக்கிறார். எனது பார்வைக்கு வந்ததை உங்களின் பார்வைக்காக தருகிறேன். வர்களீன் பெயர்கள் இதில் இல்லை. படிக்கும் போது புரிந்து கொள்ளுங்கள்(!)


நண்பன்:
that interview s painfull...
தோழர்: :(
மிரட்டி கதைக்க வைக்கமுடியும்

தோழர்:
அழுது கதைக்க வைக்க முடியுமா

நண்பன்: அதில உண்மை இல்லமல் இல்ல...
மரணத்தின் விழிம்பில் பல மரணங்களைப் பார்த்த மக்களுக்கு அழாமல் பேச முடியாது எதை பேசினாலும் அழுதுகோண்டே பேசுவார்கள்...
ஆனால் புலிகளை இப்படி மக்கள் திட்டுவது உணர்ச்சிவசப்ப நிலையில் சொல்லுவது.
அவங்கள் மறிப்பாங்கள் எண்டது உண்மைதான்..

தோழர்:
ஓம்

நண்பன்: ஆனால் மக்களுக்கான பாதுக்கப்பான வழி என்ன?

தோழர்: 100 வீத பாதுகாப்பு வழி இல்லாதபோது ஒப்பீட்டு ரீதியில்
ஓரளவு பாதுகாப்பு குறித்து
யோசிப்பதுதான் இயல்பு

நண்பர்: மக்களை கட்டுபடுத்தி சில விசயங்களை செய்ய வேண்டியிருக்கு..
யாழ் இடப் பெயர்வின் போது வர மாட்டம் எண்டு சொன்ன மக்களை கட்டயாப் படுத்திதான் கொண்டு வந்தார்கள் அதனால்தான் பெரு இழப்பு தடுக்கப் ப்ட்டது..

தோழர்: நான் யாழ்பாணத்தில இருந்தனான்.
இடம்பெயர்ந்தனான்
அப்பிடியொரு இழப்பும் வந்திருக்காது

நண்பர்:
ராணுவம் கைப்பற்றிய பின்னர் யாழ்பாணத்துக்கு திரும்பி போனவர்களுக்கு என்ன நடந்தது..

தோழர்: யாழ் கைப்பற்றல் ஒரு சுத்தி வளைத்த முற்றுகையாக நடந்தது

நண்பர்:
செம்மணி உங்களூக்கு இழபில்லையா தோழர்களே

தோழர்: இராணுவம் வரும்வழியில் உள்ள மக்கள் தாங்களாகவே இடம்பெயர்ந்திருப்பார்கள்.
ஐயா.. 100 வீத பாதுகாப்புக்கு எங்கும் வழியில்லை என்றபிறகு

நண்பர்:
ஒரு கிருசாந்தியின் கதைதான் உங்களூக்கு தெரியும் தெரியாத கிருசாந்திகள் எத்தனை

தோழர்: 13 வருடத்தில யாழ்பாணத்தில கிட்டத்தட்ட 5000 மக்களை இராணுவம் கொலைசெய்திருக்கலாம்
வன்னியில் கடந்த 3 மாதத்தில் 3000
இன்று சாகிறாயா நாளை சாகிறாயா எனக் கேட்டால்
நாளை என்றுதான் சாதாரணமாக எல்லாரும் சொல்வார்கள்
நான் மக்கள் பக்கமிருந்து கதைக்கிறேன். நீங்கள் புலிகள் பக்கமிருந்து கதைக்கிறீர்கள்.
அதுவும் வன்னி மக்கள் பக்கமிருந்து
நான் ஆமி பக்கமிருந்து கதைக்கும் நிலையை ஏற்படுத்த வேணாம் :)

நண்பர்:
வன்னியில் அனைவரும் கடந்த 25 வருட போராட்டதின் ஆணி வேர்கள். கட்டாயப் பயிற்சி பெற்றவர்கள். புலிகளீன் பலம் இவர்கள். அங்கு வன்னி மக்கள் மட்டுமல்ல ..மட்டகளப்பு யாழ்ப்பாண திருகோண்மலை உள்ளிட்ட தமிழீழத்தின் சகல பகுதி மக்களூம் இருகிறார்கள்.

நண்பர்: ஏன் இவர்கள் வன்னிக்குப் போனார்கள்.

தோழர்: இருக்கிறார்கள்
யாழ்பாணத்தான் எஸ்கேப்பு

நண்பர்: புலிகள் பலவந்தமாக கூட்டிப் போனார்களா?
இல்லையே..

தோழர்: வெளிநாடொன்றுக்கு போக வசதியுள்ள எவனும்
வன்னியில இல்லை

நண்பர்: 2006 ல் சண்டை தொடங்கிய போது...வண்டி வண்டியாக வன்னி நோக்கி போய்கொண்டிருந்த மக்களை நான் பார்த்திருகிறேன்.
நேரடியாக பேசியிருக்கிறேன்.

தோழர்: நம்பிக்கைதான்
ஒப்பீடுதான் ஒரு குறித்த சூழலில அங்காலயா இங்காலயா பாதுகாப்பு
என்றுதான் மக்கள் யோசிப்பினம்

நண்பர்: அமாம் அவர்களூக்கு ராணுவப் பகுதி பாதுகாபில்லை..புலிகள்தான் பாதுகாப்பு என்று நம்பினார்கள்.இன்னமும் லட்சக்கணக்கில் புலிகளை நம்பி வன்னியில் இருகிறார்கள் அவர்களுக்கு யார் பாதுக்கப்பு வாழங்குவது

தோழர்: இப்ப.. வன்னியில பாதுகாப்பில்லை
திருகோணமலைக்கு கப்பலில போறதுதான்
பாதுகாப்பு
என மக்கள் நம்புகினம்
நண்பர்: ராணுவப் பகுதியில் எப்போதும் பாதுகாபு இல்லை.

தோழர்: அது உண்மையா இல்லயா என்பது வேறு
மக்கள் நம்புகிறார்கள்
வன்னியை விட ஒப்பீட்டு ரீதியில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு உண்டு.

நன்பர்: ஆகவே..போரை நீறுத்த சொல்லி சொல்ல வேண்டுமே தவிர இப்படி..மக்களை மற்றுமொரு பொறிக்குள் தள்ளும் வேலையைச் செய்யக் கூடாது...

தோழர்:
தமிழ்நதி மற்றும் நீங்கள் விரும்புவதுபோல
அவர்கள் அங்கிருக்கிறதுதான் நல்லது..அவர்கள் செத்தாலும் மரியாதையாக சாகட்டும்

நண்பர்: திடிரென போர் நிறுத்தப்பாட்டால் இப்போது வெளீயில் சென்ற மக்களை நீங்கள் பாதுகாப்பீர்களா? மக்களின் பாதுக்கப்பை உறுதிப்ப்படுத்தி அனைதுலக மைப்பின் பாதுக்காபில் மக்களி வைத்திருக்க யரும் முன்வரவில்லியெனில் புலிகள் தான் பாதுகாப்பு.
தோழர்: தர்க்கரீதியில் - யுத்தத்தில மக்களை தங்கட சொந்த இடத்த விட்டு போ என்டு கேட்கேலாதுதான்.
ஆனா உயிர்வதையில தர்க்கமாவது

நண்பர்:
இதெற்க்கு முன்னர் ராணுவப் பகுதிக்கு சென்ற மக்களுக்கு யாழிலும் மட்டக்களபிலும் என்ன நடந்தது ?1990 இல புளட் மோகனோடு சேர்ந்து இரணூவம் மக்களைக் கொலை செய்தது... டயர் போட்டு இளைஞர்களை கொழுத்தியது..நான் கருகிய உடல்களை பாடசாலைக்குப் போகும் ஒவ்வொரு நாளிலும் பார்த்திருக்கிறன் 1991,1992 , 1993 காலப் பகுதில் இது நடந்தது. கிழக்கு பகுதியை மீட்ட பின்னர் மட்டக்களப்பு நகரில் மட்டும் 2 மாதத்தில் கானமல் போனவர்கலைன் எண்ணிக்கை 1200. மரணீத்தவர்கள் 3 மாதத்தில் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் 4000 பேர்.
இப்போது கரூணாவோடு செர்ந்து அரசு கொலை செய்தவர்களின் பட்டியல் கிழக்கில் நீளமானது.

தோழர்:
போர் நிறுத்தப்படாவிட்டால்.. செத்த மக்களை திருப்பி தர முடியுமா
கிட்டத்தட்ட தமிழீழ போராட்டம் புலத்திற்கு வந்த பிறகு - யாழ் மட்டு திருமலை மக்களை போல வன்னி மக்களும் இருக்கட்டும்
இங்க திண்டுகொழுத்த நாங்கள் கொஞ்சம் போராடட்டும்
அங்க சனம் களைத்துவிட்டார்கள்

நண்பர்: போர் என்னபது மனிதர்களை கொல்லும் ஒரு கருவி...ஒரு சாத்தான்...
சாத்தனை ஒழிக்க வேண்டும்...
போர் நிக்க வேண்டும்

தோழர்: புலத்தில சனம் மாயை கலைந்து எழும்பியற்காகவேனும்
இந்த நிலை ஏற்பட்டது நல்லதுதான்

நணப்ர்: அதற்க்கு உலகம் என்ன செய்கீறது..புலிகளே மக்களை விடுங்கள் எண்டுதானே உங்கள் மனித உரிமை வாதிகள் கேட்கிறார்கள்.

தோழர்: நான் உறுதியா சொல்லுவன். புலிகளின் தாக்குதலில் 3000 படையினர் பலி என்றாலும் சனம் இப்ப பரபரப்பாககிறதில்லை

நண்பர்: அங்க்குள்ள அத்தனை மக்களுகும் புலிகளிடமிருந்து பிரிந்து வரத் தயராக இல்லை....

தோழர்: அப்படியாயின் வர விரும்புகிரவர்கலையெல்லாம். வெளியே எடுத்து விட்டு மற்ரவர்கலைக் கொல்லாம் என்கிறீர்களா?
இப்ப நாங்க போராடவேண்டியது.. போர்நிறுத்தத்தோடு.. இ.டம்பெயரும் மக்களுக்கு அலைனத்துலக கண்காணிப்பில பாதுகாப்பு அவர்கள் இடம்பெயர்கிறார்கள் என்பதற்காக துரோகிகள் ஆகமுடியாது

தோழர்:
2 லட்சம் மக்களில் 1 லட்சம் வருகிறார்கள் எண்டு வைத்துக்கொள்ளுங்கள்..அப்படியானால் உங்களுக்காக போராடியவர்களோடு இருக்கும் அடுத்த 1 லட்சம் மக்களை பலிகொடுப்பது சரி என்கிறீர்களா
வெளியே வருகிறவர்கள் துரோகிகள் அல்ல....

நண்பர்: அப்படி வெளிநாட்டில் இருந்து சொல்லும் அனைவரும் தங்களைத் துரோகி எண்டு அறிவிக்கட்டும்..அப்படி அறிவிப்பது எவ்வளவு சின்னபுள்லதானமா அறிவற்றதோ அது போலவே இதுவும்

தோழர்:
ஆனா நிலைமை அப்படியில்லை.. ஆமிட்டபோன சனத்தில எத்தினைபேரை அவன் கொல்லுறானோ
அந்தளவுக்கு
பிரசாரம் செய்யலாம் என்ட நிலைமைதான்
இருக்கு
நண்பர்: இல்லை 2 லட்சம் பேர் இருந்தால் போராடம் வலுக்கும் உலகம் கேட்ட்டக வேண்டும்..

தோழர்:
அப்ப பலியாவார்கள் என்று
தெரிகிறதுதானே 1 லட்சம் பேர் பலியாகிவிடகூடாது என்பதற்காக
2 லட்சம்பேரை பலிகொடுக்கலாமா என்ன லொஜிக் இது

நண்பர்:
இப்ப மக்கள் வெளியேற தாயராக இருகிறார்கள் எண்டு போராட்டத்தை திசை திருப்புகிறார்கள்.
போர் நிறுத்தம் என்ற ஒன்றைத் தவிர வேறு பேச்சு எதுவும் இல்லை..
நண்பர்: மக்கள் வெளியேற விரும்புகிறார்கள் என்று சொல்வதின் மூலம் இலங்கை அரசு பொய்ப் பரப்புரை செய்து உலகை திசை திருப்பும் இந்தியா ரஸ்யா போன்ற ஆதரவு சக்திகள் இதனை தமக்கு சார்ப்பாக்கிக் கொள்ளூம்..

3 comments:

Anonymous said...

விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்துவைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. வன்னியில் சில நூறு புலிகளே இருப்பதாகவும் அவர்களில் 90 சதவீதமானோர் காடுகளுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறும் சிறிலங்கா இராணுவத்தினர், அங்குள்ள மக்களை விடுதலைப் புலிகளே தடுத்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். லட்சக்கணக்கான மக்களை அரசாங்கம் கூறுவதுபோல சில போராளிகளால் தடுத்து வைத்திருக்க முடியுமா?. இதனை எப்படி நம்ப முடியும்?.

அதாவது, இது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் போடும் நாடகமாகும். இந்த நாடகத்தை எதற்காக அனைத்துலக சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றுள்ள முக்கியமான கேள்வியாகும்.

Anonymous said...

You are joking anony. You are so blind by propaganda, that you couldn't see the suffering of the people.
Be serious. Don't joke with Tamil civilians. Are you a Tamilan?
Everyone knows, that the civilians must leave the war zone. But you say let them die. You have no right to comment on this issue. You and your families are living in a safe country.
What kind of person are you? Are you working with Rajapakshe?

Anonymous said...

* LTTE suicide blast kills 17

fleeing civilians in northern Sri Lanka, at least 10,000 rescued by the troops
Monday, April 20, 2009, 5:42 GMT, ColomboPage News Desk, Sri Lanka.
Apr 20, Colombo: An LTTE suicide bomb attack just a short while ago among the thousands of Tamil civilians who are now trying to escape the no-fire zone killed at least 17 civilians, the military said.

Sri Lanka troops breached an LTTE built earth bund this morning and rescued at least 10,000 civilians out of the no-fire zone, the military said.

The earth bund had been built by the LTTE across the land link to the narrow coastal strip demarcated as the no-fire zone to stall the military offensives.

"Troops captured the earth bund and so far 10,000 people have been rescued. It is still going on," a defence official said.

According to the defence sources, the masses have escaped across the lagoon into the troops-controlled areas of Puthukkudyiruppu,