Wednesday, November 22, 2006

கடலூர் சிப்காட் பகுதியின் சோகம்.....

கடலூரில் பழைய நகரில் இருந்து தொழிற்சாலைகள் நிரம்பிய அந்த பகுதிக்குள் நாம் நுழைகிறபோது காற்றில் கலந்து வரும் மணம் நம்மை சுவாசிக்க முடியாமல் திணர வைக்கும் குறிப்பிட்ட தூரம்வரை எம்மால் சுவாசிக்கமுடியவில்லை. வெளியே வீதியின் அருகில் சில கிராமக்களும் நிறைய மனிதர்களும் சாதாரணமாக திரிகிறார்கள். ஒரு 10 தொடக்கம் 15 நிமிட நேரத்தில் எம்மால் உணரப்பட்ட அந்த கொடுமையான மணம் சூழ்ந்துள்ள பகுதியில் எப்படி மனிதர்கள்?

அனைவருக்கும் போபால் விசவாயுக் கசிவினை நினைவிருக்கலாம்.அதைப் போன்ற அவலம் சிறிது சிறிதாக கடலூர் சிப்காட் பகுதி மக்களை நோக்கியும் வருகிறது.மக்கள் வாழ்விடங்களில் தாரளமாக நிறுவப்பட்டுள்ள இரசாயனக் கம்பனிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுகளுக்கு சரியான பாதுகாப்பு இல்லை.இன்னுமொரு போபாலை தமிழகத்தில் பார்த்த பிறகுதான் வழமையான அரச நடவடிக்கை வகையாராக்கள் வரும் ஆனால் தங்கள் ஆயுளை குறைத்துக் கொள்ளும் அந்த கிராமவசிகளுக்கு சரியான பாதுகாப்போ அகற்றப் படும் கழிவுகளை மேற்பார்வை செய்வதற்கான ஒழுங்குகளோ சரிவர இல்லை.

கடந்தவாரத்தில் நான் அங்கு போயிருந்த்த போது அந்த மக்களின் சோகங்களையும் தொழில் நிறுவனங்களின் அத்து மீறல் களையும் பார்க்க கிடைத்தது.தொழிற்ச்சங்கம் தொடங்கியமைக்காக தண்டிக்கப்பட்ட தொழிளார்கள் போராட முற்பட்டபோது காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களை கடந்தவாரம் நான் நேரில் பார்த்தேன்.

இந்த நிலையில் இந்த அவலத்தைச் சொல்லுவதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி(29.11.2006)கடலூரில் இருந்து ஒரு மிதிவண்டிப்(சைக்கிள்) பேரணிஆரம்பமாகிறது. அந்த பேரணி போபால் நினைவுதினமான டிசம்பர் 3 ஆம் திகதிக்கு முதல் நாள் டிசம்பர் 2 அன்று சென்னையை வந்தடையும் அன்றைய தினம் சென்னை பெசெண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கடலூர் அவலம் உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊள்ள தொழிற்சாலை பாதிப்பின் தாக்கம் குறித்த ஆவணப்படங்கள் திரையிடப் படவுள்ளது.இதேபோல் பேரணி பாண்டிசேரி ,திண்டிவனம், மதுரந்தகம் போன்ற பகுதிகளில் தரித்து நிற்கும் போது அங்கும் ஆவணப் படங்கள் மக்களுக்காக திரையிடப்பட்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும்

அதே காலப் பகுதில் சென்னையில் உள்ள கல்லூரிகளிலும் பாடசாலகளிலும் ஆவணப் படங்கள் திரையிடப்படுகின்றன.இந்த ஏற்பாடுகளை சென்னையில் மற்றூம் கடலூரில் உள்ள கல்லூரி\பல்கலை மாணவர்களும் சுழலியல் மந்த உரிமைப் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து மேற்குள்ளுகின்றன.

கடலூர் மக்களினது ஏனைய பகுதி மக்களினதும் இத்தகைய அவலங்கள் கூறித்தும் பின்னர் விரிவாக பதிவிடுகிறேன்.

அவசியம் உண்மையை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்...ஏனெனில் 'தலைமகன்' தமிழ் திரைப்படதில் நிலத்தடி நீரை அபகரிக்கும் பன்னாட்டுகம்பனிக்கு எதிராக காதாநாயகன் போராடுகையில் அதைத் தயாரித்த ராடன் நிறுவனத் தலைவி அல்லது கதாநாயகனின் மனைவி கொக்கோகோலா குடிக்குமாறு சொல்வதுபோல வேடிக்கை எதுவும் நடந்து விடக்கூடாது...

மேலதிக தகவலுக்கு :www.sipcotcuddalore.com

2 comments:

குழலி / Kuzhali said...

வணக்கம், இது தொடர்பான என் பதிவு மடியில் இரசாயன குண்டு

சோமி said...

நன்றி குழலி தமிழ் நாட்டில் நிறையப் பேருக்கு இது தெரியாமலே இருப்பதுதான் வேதனையாக உள்ளது.இன்று சென்னை கிறித்தவக் கல்லூரியில் கடலூர் பற்றிய படம் திரையிட்டோம். துன்பம் என்னவெனில் கலந்துகொண்ட 50 மாணவர்களில் யாருக்குமே இதுபற்றியோ தமிழ் நாட்டில் இத்தகைய தொழிற்சாலைகள் பல்வேறு இடங்களில் உள்ளது பற்றியோ எதுவுமே தெரியவில்லை.கலந்து கொண்ட அனைவரும் ஊடகத்துறை மாணவர்கள்

பின்னூட்டத்துக்கு நன்றி